மேலும் அறிய

மனைவி இறந்த சோகத்தில் வளர்ப்பு நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்

மனைவி இறந்த நிலையில் நன்றியுடன் தன்னுடன் இருந்த வளர்ப்பு நாய் மீது அவர் அதிக பாசம் காட்டி வளர்த்து ‌ வந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொசப்பாளையம் சின்ன சாயக்காரத் தெருவில் வசித்து வந்தவர் ராகு வயது (45). இவர் சேலத்தை சேர்ந்தவர்‌. இவர் தனது மனைவியுடன் ஆடைகளை தைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர்களுடன் செல்லப்பிராணி ஆண் நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடன் சுமை இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்பு இவருடைய மனைவி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் ரகு மட்டும் வீட்டில் சோகத்துடன் ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தார். மனைவி இறந்த நிலையில் நன்றியுடன் தன்னுடன் இருந்த வளர்ப்பு நாய் மீது அவர் அதிக பாசம் காட்டி வளர்த்து ‌ வந்துள்ளார். இந்த நிலையில் ரகுவுக்கு கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்து விட்டால் தான் வளர்த்து வந்த நாய் தெரு நாயாகி அனாதையாகிவிடுமே என நினைத்த அவர் நாயையும் தூக்கில்போட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நாயின் கழுத்திலும் தனது கழுத்திலும் கயிறை மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதில் ரகு நாயுடன் இறந்து விட்டார். கடந்த ஒரு வாரமாகவே அவரது வீடு உள்புறமாக மூடப்பட்டுள்ளது.  ரகுவின் வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.டி.அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக அதுபற்றி ஆரணி நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் துணை ஆய்வாளர் சுந்தரேசன் தலைமையில் காவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரகு தனது வளர்ப்பு நாயுடன் மின்விசிறியில் தூக்குப்போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் ரகு உடலையும் இறந்து கிடந்த நாயையும் தூக்கிலிருந்து இறக்கினர்.

 


மனைவி இறந்த சோகத்தில் வளர்ப்பு நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்

 

அதன்பின் ரகு உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடை தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மட்டுமல்லாமல் வளர்ப்பு நாயையும் பிரிய மனமின்றி அதனையும் தன்னுடன் தூக்குப்போட்டுக்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.