மேலும் அறிய

மதுரையில் பயங்கரம்.. வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை - அச்சத்தில் மக்கள்

சவால் விட்டு அஜய்குமாரை கொலை செய்த சம்பவத்தால் பழிக்குபழி கொலை சம்பவம் அதிகரிக்குமோ? என பொதுமக்கள் அச்சம்.

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி கும்பலைச் சேர்ந்த ரவுடி குட்டிசாக்கு (எ) அஜய் பிரசன்ன குமாரை கதவை உடைத்துசென்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பல் - 3 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை.
 
கொலை சம்பவம்
 
மதுரை கரிமேடு சகாய மாதா தெரு பகுதியைச் சேர்ந்தவர் குட்டி சாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பாக சிறையிலிருந்து ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த குட்டிசாக்கு அஜய்குமாரின் நண்பரான தனசேகரன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கி விட்டதாக கூறியதால் அஜய் குமார் தனசேகரனை அழைத்துசென்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் ஆனது அஜய்குமாரின் வீட்டிற்கு வந்து அவரது தாயாரிடம் உனது மகனை ஒழுங்காக இருக்க சொல் என எச்சரித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அஜய்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் மற்றும் தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் சென்ற மர்ம கும்பலானது கதவை உடைத்து வீட்டிற்குள் தூங்கிய அஜய்குமாரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
 
வெள்ளைக்காளியின் ஆதரவாளர்
 
இதனையடுத்து  வீட்டிற்குள் அஜய்குமாரின் தாயார் வந்தபார்த்தபோது, அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில்  கிடந்துள்ளார். இதனையடுத்து அஜய்குமாரின் குடும்பத்தினர் கரிமேடு காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜயகுமாரின் உடலை கைப்பற்றி கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். பின்னர் அஜய்குமாரின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட குட்டிசாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மீண்டும் பழிக்கு பழி?
 
தனது தம்பி சிறையில் இருந்த போது வெளியில் வந்தால் கொலை செய்து விடுவோம். என, ஒரு கும்பல் ஜெயிலுக்குள்ளேயே மிரட்டியதாகவும் அதே கும்பல்தான்  தனது சகோதரனுக்கு போதையை ஏற்றிவிட்டு வீட்டில்  உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்து தனது தம்பியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர் என கொலையுண்ட அஜய் குமாரின் சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார். மதுரையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த அஜய்குமார் வீட்டிற்குள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவம் நடைபெறும். என, அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே அஜய்குமார் கொலை தொடர்பாக பழக்கடை சுந்தர்(38) தனது சகோதரர் தொத்தா சுந்தர்(36) மற்றும் அவரது பாண்டியராஜன்(26) ஆகிய மூன்று பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் கரிமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Embed widget