மேலும் அறிய

மாமனாரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை - மனைவி உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

’’நரேஷ் குமார் ஜாமீனில் விடுதலையான நிலையில், மீண்டும்  மேற்கு வங்கத்திற்கு ராணுவப்பணிக்கு சென்று சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்’’

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் நரேஷ்குமார் (40)   மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சசிகலா (36) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.  நரேஷ் குமாருக்கும், அவரது மனைவி சசிகலாவிற்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் ஊர் மக்கள் சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி தனது மாமனார் மகாலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற நரேஷ்குமார் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்  அடைந்தார்.  இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் இருந்து நரேஷ் குமார் ஜாமீனில் விடுதலையான நிலையில், மீண்டும்  மேற்கு வங்கத்திற்கு ராணுவப்பணிக்கு சென்று சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.  

மாமனாரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை  - மனைவி உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி பண்ணந்தூர் பகுதிக்கு நரேஷ்குமார் வந்த நிலையில்  இதை அறிந்த அவரது மனைவி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், நரேஷ்குமாரை சுற்றி வளைத்து கட்டையால் தாக்கி உள்ளனர். இதுமட்டுமின்றி நரேஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயம் அடைந்த நரேஷ்குமாரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த பாரூர் காவல்துறையினர் தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.

மாமனாரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை  - மனைவி உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

இந்த கொலை வழக்கு தொடர்பாக பாரூர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன் (38), நரேஷ்குமாரின் மனைவி சசிகலா, திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மகேஸ்வரன் (30), பரமேஸ்வரனின் மனைவி தீபா (35), மகேஸ்வரனின் மனைவி ராஜகுமாரி (27), வடிவேல் (30), சதீஷ் (27) ஆகிய 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். பட்ட பகலில் நடுரோட்டில் சொந்த மனைவியே கட்டிய கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget