மேலும் அறிய

Krishnagiri Caste killing: காதல் திருமணத்தால் ஆணவக்கொலை.. கிருஷ்ணகிரியில் மகன், தாயை வெட்டிக்கொன்ற கொடூரம்

காதல் திருமணம் காரணமாக கிருஷ்ணகிரியில் மகன் மற்றும் தாயை கத்தியால் தாக்கி, ஆணவக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊத்தங்கரை அருகே  அருணபதி கிராமத்தில் காதல் திருமணம் செய்த மகனை தந்தையே வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன்படி தண்டபாணி என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் சுபாஷ் மற்றும் தனது தாய் கண்ணம்மாள் ஆகியோரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மருமகள்  அனுசுயாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அருணபதி கிராமத்தை சேர்ந்த  சுபாஷ் கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி, மாற்று சமூகத்தை சேர்ந்த அனுசுயாவை காதல் திருமணம் செய்தார். திருப்பூரில் வேலை செய்த இடத்தில்  ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயாவிற்கும், சுபாஷிற்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டின் எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்த தண்டபாணி தனது தாய், மகன் மற்றும் மருமகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதான தண்டபாணி. இவர் தனது மகன் சுப்பாஷ் உள்ளிட்ட குடும்பத்தாருடன் சேர்ந்து, திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் சுபாஷிற்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்கு தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுபாஷ் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலை மணம் முடித்துள்ளார்.

திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவக்கொலை:

 இந்நிலையில் தனது சொந்த கிராமமான அருணபதி வந்த தண்டபாணி,  தனது தாய் கண்ணம்மாள் மூலம் சமாதானம் பேசி  சுபாஷையும் அவரது மனைவியும் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.  அங்கு அனைவரும் சகஜமாக பேசி உண்டுவிட்டு உறங்கியபோது, அதிகாலை 5 மணி அளவில் தண்டபாணி கூர்மையான கத்தியால் மகன் சுபாஷை வெட்டி உள்ளார். சத்தம் கேட்டு எழுந்து தடுக்க முயன்ற தாய் கண்ணம்மாளையும் தண்டபாணி வெட்டியதோடு, மருமகள் அனுசுயாவையும்  வெட்டியிருக்கிறார்.  தட்டி தடுமாறி அவர் வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலையில், வீட்டை பின்புறமாக பூட்டி விட்டு தண்டபாணி தலைமறைவாகியுள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை:

இதனிடையே, படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்த அனுசுயாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்தபோது சுபாஷ் மற்றும் கண்ணம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.  இதையடுத்து, இருவர் சடலமும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படது..  ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனுசுயாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தலைமறைவாக உள்ள தண்டபாணியை ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்மின் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றன.

அண்மையில் நடந்த சம்பவம்:

கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், சரண்யா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இதையடுத்து. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜெகனுக்கு போன் செய்த சரண்யாவின் சகோதரர் நீங்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருப்பதாகவும் அதனை வந்து பெற்றுச் செல்லுமாறும் அழைத்தார்.

அதனை நம்பிச் சென்ற ஜெகனை சரண்யாவின் உறவினர்கள் பட்டப்பகலில் சாலையில் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்லமாக வளர்த்த மகளை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததால் ஜெகனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு ஆணவக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Embed widget