மேலும் அறிய

Krishnagiri Caste killing: காதல் திருமணத்தால் ஆணவக்கொலை.. கிருஷ்ணகிரியில் மகன், தாயை வெட்டிக்கொன்ற கொடூரம்

காதல் திருமணம் காரணமாக கிருஷ்ணகிரியில் மகன் மற்றும் தாயை கத்தியால் தாக்கி, ஆணவக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊத்தங்கரை அருகே  அருணபதி கிராமத்தில் காதல் திருமணம் செய்த மகனை தந்தையே வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன்படி தண்டபாணி என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் சுபாஷ் மற்றும் தனது தாய் கண்ணம்மாள் ஆகியோரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மருமகள்  அனுசுயாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அருணபதி கிராமத்தை சேர்ந்த  சுபாஷ் கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி, மாற்று சமூகத்தை சேர்ந்த அனுசுயாவை காதல் திருமணம் செய்தார். திருப்பூரில் வேலை செய்த இடத்தில்  ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயாவிற்கும், சுபாஷிற்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டின் எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்த தண்டபாணி தனது தாய், மகன் மற்றும் மருமகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதான தண்டபாணி. இவர் தனது மகன் சுப்பாஷ் உள்ளிட்ட குடும்பத்தாருடன் சேர்ந்து, திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் சுபாஷிற்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்கு தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுபாஷ் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலை மணம் முடித்துள்ளார்.

திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவக்கொலை:

 இந்நிலையில் தனது சொந்த கிராமமான அருணபதி வந்த தண்டபாணி,  தனது தாய் கண்ணம்மாள் மூலம் சமாதானம் பேசி  சுபாஷையும் அவரது மனைவியும் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.  அங்கு அனைவரும் சகஜமாக பேசி உண்டுவிட்டு உறங்கியபோது, அதிகாலை 5 மணி அளவில் தண்டபாணி கூர்மையான கத்தியால் மகன் சுபாஷை வெட்டி உள்ளார். சத்தம் கேட்டு எழுந்து தடுக்க முயன்ற தாய் கண்ணம்மாளையும் தண்டபாணி வெட்டியதோடு, மருமகள் அனுசுயாவையும்  வெட்டியிருக்கிறார்.  தட்டி தடுமாறி அவர் வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலையில், வீட்டை பின்புறமாக பூட்டி விட்டு தண்டபாணி தலைமறைவாகியுள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை:

இதனிடையே, படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்த அனுசுயாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்தபோது சுபாஷ் மற்றும் கண்ணம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.  இதையடுத்து, இருவர் சடலமும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படது..  ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அனுசுயாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தலைமறைவாக உள்ள தண்டபாணியை ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்மின் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றன.

அண்மையில் நடந்த சம்பவம்:

கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், சரண்யா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இதையடுத்து. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜெகனுக்கு போன் செய்த சரண்யாவின் சகோதரர் நீங்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருப்பதாகவும் அதனை வந்து பெற்றுச் செல்லுமாறும் அழைத்தார்.

அதனை நம்பிச் சென்ற ஜெகனை சரண்யாவின் உறவினர்கள் பட்டப்பகலில் சாலையில் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்லமாக வளர்த்த மகளை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததால் ஜெகனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு ஆணவக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget