மேலும் அறிய

Crime: விபத்தை மறைக்க முயற்சி! காரை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பனை செய்யும்போது சிக்கிய டாக்டர்!

பைக் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் இந்த விபத்து பெரிய விவகாரமாக மாறியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூருக்கு அருகில் உள்ள திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையின் குட்டிப்புரம் பாலத்தில் ஒரு பைக்கின் மீது வேகமாக வந்த கார் மோதியதில் பைக்கில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதில் பைக் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் இந்த விபத்து பெரிய விவகாரமாக மாறியுள்ளது. 

குறிப்பாக காவல்துறை தரப்பில் இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்றெல்லாம் விசாரணை நடக்கத் தொடங்கியது. இதனால் காவல்துறை தரப்பில் காரினை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என மும்முரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த விபத்துக்குப் பின்னர் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  விபத்தையடுத்து திருச்சூரில் உள்ள ஒரு கடைக்கு  காரினை பார்ட் பார்டாக பிரித்து விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டபோது காவல் துறையினர் காரினை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் விபத்து ஏற்படுத்திவிட்டு காரினை நிறுத்தாமல் சென்றவர்  கோழிக்கோட்டைச் சேர்ந்த கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிஜூ ஜார்ஜ்  என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து  பிஜூ ஜார்ஜ் மீது காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

காவல் துறைக்கு கிடைத்த தகவலின் படியும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியினாலும் குற்றவாளியையும் அவர்கள் பயன்படுத்திய காரினையும் விரைந்து கண்டுபிடிக்க உதவியாக இருந்தது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து பின்னணி 

முன்னதாக, இந்த விபத்து கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது. கோழிக்கோடு பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று பாலத்தில் இருந்த ஆட்டோ மற்றும் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குட்டிப்புரம் கியாந்தல்லூரைச் சேர்ந்த 22 வயதே ஆன சனா  என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து குட்டிபுரம் காவல் துறை நடத்திய விசாரணையில் கார் குறித்த தகவல் கிடைத்தது. குறிப்பாக காரின் நம்பர் பிளேட் உடைந்து தொங்கிய காட்சிகள் சிசிடிவியில் இருந்துள்ளது. 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சூரில் உள்ள கார் ஸ்கிராப்பிங் மார்க்கெட்டில் இருந்து விபத்துக்குள்ளான காரை கண்டுபிடித்தனர். விபத்துக்கு பின், காரை எங்கும் நிறுத்தாமல் சென்ற கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிஜூ ஜார்ஜ காரை குன்னம் குளத்தில் விட்டுவிட்டு, அங்கிருந்த காரை பார்ட் பார்டாக அதாவது காரினை பகுதி பகுதியாக பிரிப்பதற்காக கடையில் விட்டுள்ளார். இதனால் கார் குன்னம் குளத்தில் இருந்து திருச்சூர் அத்தாணியில் உள்ள  காரின் பாகங்களை பகுதி பகுதியாக பிரிக்கும் பெரிய கடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்துதான் காவல் துறையினர் காரினை பறிமுதல் செய்துள்ளனர்.

அதன் பின்னர் காரின் ஆவணங்களை வைத்து விசாரித்ததில் காட் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிஜூ ஜார்ஜ்க்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. ஆனால் காவல் துறை இது குறித்து அவரிடம் கேட்டபோது,  விபத்து குறித்து தனக்கு தெரியாது என கூறியுள்ளார். ஒரு மருத்துவர், ஒருவரின் மீது காரினை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்தது மட்டும் இல்லாமல் காரினை உருத் தெரியாமல் அழிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் திருச்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
India Pakistan Tension: போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா.. ஒற்றை ட்வீட்டில் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முடிவுக்கு வருகிறது இந்தியா - பாகிஸ்தான் போர்.. ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
Embed widget