மேலும் அறிய

4.66 கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து விற்பனை - 11 பேர் கொண்ட கும்பல் கைது

’’50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதை இரட்டிப்பு செய்து 2 கோடியாக தருவதாக வாக்குறுதி கொடுத்து  ஒருவரை ஏமாற்ற முயற்சி’’

கிருஷ்ணகிரியில் உணவகம் அருகே 10 பேர் கொண்ட கும்பல் தங்களது 5 கார்களை நிறுத்தி விட்டு நீண்ட நேரமாக பேசி கொண்டிருந்தனர். இதை பார்த்த குற்றப்பிரிவு காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கார்கள் மூலமாக கிருஷ்ணகிரி நகர் பகுதியை சுற்றி வருவதும் பிறகு அதே பகுதியில் நின்று பேசிக் கொள்வதும் என தொடர்ச்சியாக மூன்று முறை காரில் நகரை அவ்வப்போது சுற்றி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அதிகரிக்க துவங்கியது குற்றப்பிரிவு காவல் துறையினர் அந்த 11 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்ததால் இந்த 11 நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

4.66 கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து விற்பனை - 11 பேர் கொண்ட கும்பல் கைது

அந்த விசாரணையில் அவர்கள் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகி, ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர், ஈரோடு மாவட்டம் முருகேசன், காவேரிபட்டினம் நாகராஜ், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ், காவேரிப்பட்டினம் நாகராஜ் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் 11 நபர்களும் கிருஷ்ணகிரி நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளது தெரியவந்தது. மகி என்பவர் ராயக்கோட்டை சங்கரின் காருக்கு டிரைவராக பணியாற்றி இருந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சென்று சோதனை செய்தபோது பல்வேறு நபர்களிடம் பணம் பெறப்பட்டது. தொடர்பான ஆவணங்கள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது பணம் இரட்டிப்பு செய்து தருவது தொடர்பாகவும் மக்களின் ஆசையை தூண்டும் வகையில் 2000 ரூபாய் நோட்டுகளை வீடியோவாக பதிவு செய்தும் வைத்திருந்தனர்.

4.66 கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து விற்பனை - 11 பேர் கொண்ட கும்பல் கைது

இதனை அடுத்து ராயக்கோட்டை சேர்ந்த சங்கரின் வீட்டில் காவலர்கள் சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 4 கோடியே 66 லட்சம் ஜெராக்ஸ்  நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டதுடன் இவர்கள் பயன்படுத்திய 5 கார்களும் , 2 இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையின் இவர்களுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை முதல் கட்ட விசாரணையில் கிருஷ்ணகிரியில் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதை இரட்டிப்பு செய்து 2 கோடியாக தருவதாக வாக்குறுதி கொடுத்து  ஒருவரை ஏமாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள இந்த கும்பலின் முக்கிய நபர்கள் 3 காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget