மேலும் அறிய

அந்தமானில் தொழில் போட்டி: கிளாம்பாக்கத்தில் கடத்தல், காஞ்சியில் கொலை! 1200 கிமீ பயணம்.. அதிர்ச்சி தரும் காரணம்!

அந்தமானில் ஹோட்டல் நடத்துவதில் தொழில் போட்டியால், கிளாம்பாக்கத்தில் இருந்து கடத்தி சென்று சடலத்தை ஒடிசாவில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தமானில் ஹோட்டல் நடத்துவதில் தொழில் போட்டியால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காரில் கடத்தி சென்று, காஞ்சிபுரத்தில் கொலை செய்து 1200 கிலோமீட்டர் உடலை கொண்டு சென்று ஒடிசாவில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்தமானில் ஓட்டல் பார்ட்னர்கள்

அந்தமானை பகுதியை சேர்ந்தவர் நியாமத் அலி (47). இவர் அந்தமானில் ஹோட்டல் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி மந்திப்கவுர் (38). இவரது மனைவி அந்தமான் ஏர்லைன்ஸ் விமான சேவையில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் மும்தகியூம் (38). இதில் நியாமத் அலியும், இவரது நண்பரான மும்தகியூம் (38) இருவரும் சேர்ந்து பார்ட்னராக அந்தமானில் ஓட்டல் வைத்து தொழில் செய்து வந்தனர். 

இந்நிலையில் சென்னை அடுத்த வண்டலூரில் ஹோட்டலுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக, அந்தமானில் இருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு நியாமாத் அலி கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். பின்னர் ஏர்போர்ட்டில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகில் ஆட்டோவில் வந்து இறங்கினார்.

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்

இதனை அடுத்து அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனது. அப்போது அவரது மனைவி மந்திப்கவூர் தனத, கணவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அந்தமான் காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்தமான் போலீசார் சென்னை ஏர்போர்ட்டில் உள்ள போலீசில் நியாமத் அலி காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்தனர். இதில் கடைசியாக காணாமல் போனது வண்டலூர் பகுதி என்பதால் வழக்கை கிளாம்பாக்கம் போலீசாருக்கு புகாரை மாற்றி அனுப்பி உள்ளனர். 

கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில், கிளாம்பாக்கம் போலீஸ் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது செல்போன் நம்பரை வைத்து, கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது அவருடன் பார்ட்னராக தொழில் செய்த மும்தகியூம் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து மும்தகியூமை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் எனக்கு எதுவும் தெரியாது என தொடர்ந்து போலீசாரிடம் தெரிவித்து வந்துள்ளார். நான் பாண்டிச்சேரிக்கு சென்று பின்னர் விசாகப்பட்டினத்திற்கு சென்று கிளம்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார். இருந்தும் அவர் மீது காவல்துறையினருக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்து வந்துள்ளது.

காட்டிக் கொடுத்த செல்போன்

அவரது செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது வண்டலூர் மற்றும் பொத்தேரியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் ரெண்டு பேர் மும்தகியூமுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மும்தகியூமின் தூரத்து உறவினரும், கல்லூரி மாணவனுமான முகமத் அயான்(19) என்பவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது மும்தகியூமும், முகமது அயானும் சேர்ந்து பாண்டிச்சேரி மற்றும் விசாகம்பட்டினத்திற்கு சென்று சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மேலும் விசாரணையை துரிதப்படுத்த போலீசார் பாண்டிச்சேரியில் ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது போலியான செல்போன் நம்பர்கள் மூலம் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டியதும் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த செல்போன் நபர்களை வேறு ஒருவருடன் கொடுத்து அனுப்பியதும் அம்பலமானது.

காஞ்சிபுரத்தில் கொலை : ஒடிசாவில் சடலம்

தொடர்ந்து இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் 5 பேர் கொண்ட கும்பல் நியாமத்அலியை வண்டலூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் கடத்தி சென்று கொன்று, உடலை ஒரிசாவுக்கு எடுத்து சென்று வீசிவிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கிளாம்பாக்கம் போலீசார் மாயமான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

தொழில் போட்டியில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக  மும்தகியூம் (38), கல்லூரி மாணவர்கள் முகமது அயான் (19), சுப்யான்(19) ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து சென்னை புயல் சிறையில் அடைத்தனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Embed widget