மேலும் அறிய

Civic Chandran : பிரபல எழுத்தாளர் மீது மேலும் ஒரு பாலியல் குற்றப் புகார்.. பரபரப்பு பதிவுகள்.. நடந்தது என்ன?

கேரள எழுத்தாளர் சிவிக் சந்திரன் மீது இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது இன்னொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார்.

கேரள எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாக அறியப்பட்ட சிவிக் சந்திரன் மீது இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது இன்னொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன். இவர் மீது கடந்த வாரம் இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் கோயிலாண்டி காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சிவிக் சந்திரன் தலைமறைவாக உள்ளார். அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார். 

இந்நிலையில் தான் மேலும் ஒரு இளம் பெண் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.  நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் கடந்த 2020 பிப்ரவரியில் சந்திரன் தன்னை ஒரு புத்தகக் காட்சியில் சந்தித்ததாகவும், அப்போது பாலியல் இச்சையுடன் தன்னை நெருங்கியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இத்துடன் இரண்டு புகார்கள் எழுந்துள்ள நிலையில் சிவிக் சந்திரன் தலைமறைவாக உள்ளார்.

யார் இந்த சிவிக் சந்திரன்?

சிவிக் சந்திரன் 71 வயது எழுத்தாளர். கேரள மாநிலம் நன்கு அறிந்த இலக்கிய, கலாச்சார அடையாளம். இவர் முன்னாள் நக்சல்பாரியும் கூட. கோழிக்கோட்டில் இவர் நன்கு அறியப்பட்ட பிரபலம். இந்நிலையில் தான் அவர் மீது பெண் எழுத்தாளர் புகார் கூறினார். அவர் கடந்த 22ஆம் தேதி தனது பேஸ்புக் பதிவில் தனக்கு நேர்ந்த அவலம் பற்றி விவரித்திருந்தார்.

பாலியல் தொல்லையை விவரித்த ஃபேஸ்புக் பதிவு:

அதில்  அவர், ஒரு புத்தக கண்காட்சியை ஒட்டிய நிகழ்ச்சி அது. அங்கிருந்தவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள். அதனாலேயே கவிதை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் நாங்கள் அனைவரும் மது அருந்தோன். பின்னர் நாங்கள் அருகிலிருந்த கடற்கரைக்கு சென்றோம். அதுவரை இயல்பாக இருந்த சிவிக் சந்திரன். கடற்கரையில் என் கரங்களைப் பற்றி இழுத்து என்னை அவர் உடலோடு கட்டியணைத்தார். நான் அவரைத் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டேன். ஆனாலும் கடற்கரையில் இருந்த வரை அவர் என்னை சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு செய்தார். பின்னர் எனது அருகே வந்து என் மடியில் தலைவைத்துப் படுக்க முற்பட்டார். என் உடல் மீது அவர் கைகளை கொண்டு தடவ முற்பட்டார். எல்லோரும் இந்தக் காட்சியைப் பார்த்தனர். நான் அவரை தள்ளிவிட்டு வேறொரு இடத்துக்குச் சென்றேன். ஒரு கவிஞர் எனது நிலை அறிந்து என்னை தேற்றினார். நான் மிகவும் வருந்தினேன். அங்கே நிறைய பேர் இருந்தனர். அதனால் அந்த வேளையில் ஒரு பெரிய பிரச்னை உருவாக்க வேண்டாம் என்று எண்ணினேன்.

நாங்கள் கடற்கரையில் இருந்து உணவு அருந்தும் இடத்திற்கு வந்தோம். அங்கும் தொடர்ந்து வந்த அவர் எனக்கு உணவு ஊட்டிவிட முற்பட்டார். நான் சாப்பிடாமலேயே அங்கிருந்து புறப்பட்டேன். ஒரு கலாச்சார ஆர்வலர், கவிஞரிடமிருந்து இப்படியொரு அருவருப்பான அனுபவம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை அன்றே அங்கேயே ஏன் அறையாமல் விட்டோம் என்று இப்போது வருந்துகிறேன். அவருடைய வயதில் பாதி வயது நிரம்பிய ஒரு பெண்ணிடம் அவரால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது எனத் தெரியவில்லை. அவரை ஆதரித்துப் பேசுபவர்களை நினைத்து எனக்கு இன்னமும் கோபம் அதிகமாக வருகிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவிக் சந்திரன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget