மேலும் அறிய

Civic Chandran : பிரபல எழுத்தாளர் மீது மேலும் ஒரு பாலியல் குற்றப் புகார்.. பரபரப்பு பதிவுகள்.. நடந்தது என்ன?

கேரள எழுத்தாளர் சிவிக் சந்திரன் மீது இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது இன்னொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார்.

கேரள எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாக அறியப்பட்ட சிவிக் சந்திரன் மீது இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது இன்னொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன். இவர் மீது கடந்த வாரம் இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் கோயிலாண்டி காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சிவிக் சந்திரன் தலைமறைவாக உள்ளார். அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார். 

இந்நிலையில் தான் மேலும் ஒரு இளம் பெண் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.  நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் கடந்த 2020 பிப்ரவரியில் சந்திரன் தன்னை ஒரு புத்தகக் காட்சியில் சந்தித்ததாகவும், அப்போது பாலியல் இச்சையுடன் தன்னை நெருங்கியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இத்துடன் இரண்டு புகார்கள் எழுந்துள்ள நிலையில் சிவிக் சந்திரன் தலைமறைவாக உள்ளார்.

யார் இந்த சிவிக் சந்திரன்?

சிவிக் சந்திரன் 71 வயது எழுத்தாளர். கேரள மாநிலம் நன்கு அறிந்த இலக்கிய, கலாச்சார அடையாளம். இவர் முன்னாள் நக்சல்பாரியும் கூட. கோழிக்கோட்டில் இவர் நன்கு அறியப்பட்ட பிரபலம். இந்நிலையில் தான் அவர் மீது பெண் எழுத்தாளர் புகார் கூறினார். அவர் கடந்த 22ஆம் தேதி தனது பேஸ்புக் பதிவில் தனக்கு நேர்ந்த அவலம் பற்றி விவரித்திருந்தார்.

பாலியல் தொல்லையை விவரித்த ஃபேஸ்புக் பதிவு:

அதில்  அவர், ஒரு புத்தக கண்காட்சியை ஒட்டிய நிகழ்ச்சி அது. அங்கிருந்தவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள். அதனாலேயே கவிதை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் நாங்கள் அனைவரும் மது அருந்தோன். பின்னர் நாங்கள் அருகிலிருந்த கடற்கரைக்கு சென்றோம். அதுவரை இயல்பாக இருந்த சிவிக் சந்திரன். கடற்கரையில் என் கரங்களைப் பற்றி இழுத்து என்னை அவர் உடலோடு கட்டியணைத்தார். நான் அவரைத் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டேன். ஆனாலும் கடற்கரையில் இருந்த வரை அவர் என்னை சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு செய்தார். பின்னர் எனது அருகே வந்து என் மடியில் தலைவைத்துப் படுக்க முற்பட்டார். என் உடல் மீது அவர் கைகளை கொண்டு தடவ முற்பட்டார். எல்லோரும் இந்தக் காட்சியைப் பார்த்தனர். நான் அவரை தள்ளிவிட்டு வேறொரு இடத்துக்குச் சென்றேன். ஒரு கவிஞர் எனது நிலை அறிந்து என்னை தேற்றினார். நான் மிகவும் வருந்தினேன். அங்கே நிறைய பேர் இருந்தனர். அதனால் அந்த வேளையில் ஒரு பெரிய பிரச்னை உருவாக்க வேண்டாம் என்று எண்ணினேன்.

நாங்கள் கடற்கரையில் இருந்து உணவு அருந்தும் இடத்திற்கு வந்தோம். அங்கும் தொடர்ந்து வந்த அவர் எனக்கு உணவு ஊட்டிவிட முற்பட்டார். நான் சாப்பிடாமலேயே அங்கிருந்து புறப்பட்டேன். ஒரு கலாச்சார ஆர்வலர், கவிஞரிடமிருந்து இப்படியொரு அருவருப்பான அனுபவம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை அன்றே அங்கேயே ஏன் அறையாமல் விட்டோம் என்று இப்போது வருந்துகிறேன். அவருடைய வயதில் பாதி வயது நிரம்பிய ஒரு பெண்ணிடம் அவரால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது எனத் தெரியவில்லை. அவரை ஆதரித்துப் பேசுபவர்களை நினைத்து எனக்கு இன்னமும் கோபம் அதிகமாக வருகிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவிக் சந்திரன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget