மேலும் அறிய

Crime: மனைவி கொலை.. கூடவே இருந்து போலீசாரை 17 ஆண்டுகளாக திசை திருப்பிய கணவன்.. சிக்கியது எப்படி?

கேரளாவில் 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 ஆண்டுகள் கழித்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 ஆண்டுகள் கழித்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புல்லாட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். ஆலப்புழா மாவட்டம் செங்கனூரில் தபால் துறையின் மூத்த கணக்காளராக பணியாற்றிய இவரின் மனைவி ரமாதேவி கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய  விசாரணையில், ரமாதேவி அணிந்திருந்த சில  நகைகள் காணாமல் போனதாக ஜனார்த்தனன் தெரிவித்திருந்தார். 

மறுநாள் அருகில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி  முத்து மற்றும் உடன் வசித்த பெண்ணுடன் காணாமல் போன நிலையில், அவர் தான் குற்றவாளி என போலீசார் சந்தேகித்தனர். அங்கிருந்த பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட நபர் ரமாதேவி கொலை செய்யப்பட்ட நாள் அந்த பக்கம்  வந்ததை கண்டதாக கூற, விசாரணை தீவிரமானது. 
ஆனால் அவரைப் பற்றிய தகவல் தெரியாத நிலையில் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. 

அப்போதைய முதல்வர் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடம் குற்றவாளியை போலீசார் விரைந்து கண்டுபிடிப்பதை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் ரமாதேவி கொலையில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் பரவ, ஜனார்த்தனன் 2007 ஆம் ஆண்டு மந்தமாக விசாரணை நடைபெறுவதாக் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தனர். முத்து தான் குற்றவாளி என்ற அடிப்படையில் விசாரணை இருந்தது. 

இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு ரமாதேவியின் கைகளில் கிடைத்த முடி மாதிரிகள் ஜனார்த்தனுடன் ஒத்துப்போனது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. மேலும் முத்துவை கண்டுபிடிக்க ஜனார்த்தனன் போலீசாருக்கு உதவி செய்தார். இந்த குழு கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துவுடன் இருந்த பெண்ணை கண்டுபிடித்தனர். இதனால் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டது. 

அவருடைய வாக்குமூலம் கொண்டு எல்லாவற்றையும் சரி பார்த்து  முத்து இந்த கொலையை செய்யவில்லை என்ற முடிவுக்கு சிபிஐ வந்தது. பின்னர் ஜனார்த்தனிடம் பலமுறை நடைபெற்ற விசாரணையில், அவர் கொடுத்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கொலை நடந்த ஓராண்டுக்குப் பிறகு ஜனார்த்தனன் வீடு, சொத்துக்களை விற்றுவிட்டு ஆரன்முலாவுக்குச் சென்றுவிட்டது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. 

அவர் வீட்டின் உள்ளே மனைவி கொலை செய்யப்பட்டதாகவும், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகவும், தான் திறந்து உள்ளே சென்றேன் எனவும் கூறியுள்ளார். இது சந்தேகத்தை மேலும் அதிகமாக்க ஜனார்த்தனனை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். யாருமே ஜனார்த்தனன் கொலையாளியாக இருப்பார் என சந்தேகிக்கவே இல்லை. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget