மேலும் அறிய

Crime: மனைவி கொலை.. கூடவே இருந்து போலீசாரை 17 ஆண்டுகளாக திசை திருப்பிய கணவன்.. சிக்கியது எப்படி?

கேரளாவில் 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 ஆண்டுகள் கழித்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 ஆண்டுகள் கழித்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புல்லாட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். ஆலப்புழா மாவட்டம் செங்கனூரில் தபால் துறையின் மூத்த கணக்காளராக பணியாற்றிய இவரின் மனைவி ரமாதேவி கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய  விசாரணையில், ரமாதேவி அணிந்திருந்த சில  நகைகள் காணாமல் போனதாக ஜனார்த்தனன் தெரிவித்திருந்தார். 

மறுநாள் அருகில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி  முத்து மற்றும் உடன் வசித்த பெண்ணுடன் காணாமல் போன நிலையில், அவர் தான் குற்றவாளி என போலீசார் சந்தேகித்தனர். அங்கிருந்த பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட நபர் ரமாதேவி கொலை செய்யப்பட்ட நாள் அந்த பக்கம்  வந்ததை கண்டதாக கூற, விசாரணை தீவிரமானது. 
ஆனால் அவரைப் பற்றிய தகவல் தெரியாத நிலையில் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. 

அப்போதைய முதல்வர் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடம் குற்றவாளியை போலீசார் விரைந்து கண்டுபிடிப்பதை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் ரமாதேவி கொலையில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் பரவ, ஜனார்த்தனன் 2007 ஆம் ஆண்டு மந்தமாக விசாரணை நடைபெறுவதாக் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தனர். முத்து தான் குற்றவாளி என்ற அடிப்படையில் விசாரணை இருந்தது. 

இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு ரமாதேவியின் கைகளில் கிடைத்த முடி மாதிரிகள் ஜனார்த்தனுடன் ஒத்துப்போனது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. மேலும் முத்துவை கண்டுபிடிக்க ஜனார்த்தனன் போலீசாருக்கு உதவி செய்தார். இந்த குழு கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துவுடன் இருந்த பெண்ணை கண்டுபிடித்தனர். இதனால் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டது. 

அவருடைய வாக்குமூலம் கொண்டு எல்லாவற்றையும் சரி பார்த்து  முத்து இந்த கொலையை செய்யவில்லை என்ற முடிவுக்கு சிபிஐ வந்தது. பின்னர் ஜனார்த்தனிடம் பலமுறை நடைபெற்ற விசாரணையில், அவர் கொடுத்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கொலை நடந்த ஓராண்டுக்குப் பிறகு ஜனார்த்தனன் வீடு, சொத்துக்களை விற்றுவிட்டு ஆரன்முலாவுக்குச் சென்றுவிட்டது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. 

அவர் வீட்டின் உள்ளே மனைவி கொலை செய்யப்பட்டதாகவும், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகவும், தான் திறந்து உள்ளே சென்றேன் எனவும் கூறியுள்ளார். இது சந்தேகத்தை மேலும் அதிகமாக்க ஜனார்த்தனனை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். யாருமே ஜனார்த்தனன் கொலையாளியாக இருப்பார் என சந்தேகிக்கவே இல்லை. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget