மேலும் அறிய

Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி

Kerala Sharon Raj murder case: கேரளாவில் ஷரோன் ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி கிரீஷ்மாவிற்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் ஊத்தரவிட்டுள்ளது.

Kerala Sharon Raj murder case: கேரளாவில் ஷரோன் ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரீஷ்மாவுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மரண தண்டனை விதித்த நீதிமன்றம்:

கொலை, விஷத்தால் தீங்கு விளைவித்தல், கொலைக்கு கடத்தல், சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கிரீஷ்மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டத தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றவாளியான கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொலை முயற்சிகள்:

கன்னியாகுமரியில் வசித்த வந்த கிரீஷ்மா கடந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, திருவனந்தபுரம் பாரசால பகுதியை சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு பயின்று வந்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகள் அவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிரீஷ்மாவுக்கு, கடந்த 2022ம் ஆண்டு ராணுவ அதிகாரி மாப்பிள்ளை உடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு கிரீஷ்மாவும் சம்மதித்தார்.

இதையடுத்து காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கிரீஷ்மா யோசித்தார். அதன்படி ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் அதிருஷ்டவசமாக ஷரோன் ராஜ் உயிர் தப்பியுள்ளார்.

குற்றவாளி என அறிவிப்பு:

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை, கிரீஷ்மா தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆயூர்வேத பானம் என கூறி ஷரோன் ராஜ்க்கு கிரீஷ்மா ஒரு பானத்தை கொடுத்துள்ளார். குடித்ததும் கசப்பாக இருக்கிறதே என கேட்க,  ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என கரிஷ்மா சொன்னதை ஏற்று முழுவதுமாக குடித்துள்ளார். ஆனால், மூலிகை விஷம் கலக்கப்பட்ட அந்த பானத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர், இரவில் பலமுறை வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கிரீஷ்மா மீது புகார் அளித்தது. 

தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்த கிரீஷ்மா ஜாமினில் வெளியேவந்தார். அதேநேரம், வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கிரீஷ்மா கொலை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அதனடிப்படையில் அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget