![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காதலர்களே உஷார்..! காவலர்கள் வேடத்தில் வரும் திருட்டு கும்பல்..! போலீசிடம் சிக்கியது எப்படி?
காதலர்களிடம் 2 ஆயிரம் பணம் பரித்தவர்களை அலேக்காக தூக்கிவந்து கம்பி எண்ணவைத்த கேளம்பாக்கம் காவல்துறையினர்.
![காதலர்களே உஷார்..! காவலர்கள் வேடத்தில் வரும் திருட்டு கும்பல்..! போலீசிடம் சிக்கியது எப்படி? Kelambakkam police arrested those who demanded Rs 2,000 from the lovers claiming to be policemen. காதலர்களே உஷார்..! காவலர்கள் வேடத்தில் வரும் திருட்டு கும்பல்..! போலீசிடம் சிக்கியது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/04/13e32844f61be1fe942b928b04c0911d1693846818112113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவலர்கள் எனக் கூறி காதலர்களிடம் பணம் பறித்தவர்களை கேளம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த காதலர்கள்
பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது(27). இவர் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலையை முடித்துவிட்டு ஒரே நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் தனது காதலியுடன் இரவு 12 மணிக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னை கேளம்பாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கோவளம், கேளம்பாக்கம், கழிப்பட்டூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இரண்டுபேர் TN 05 CK 8694 எண் கொண்ட வாகனத்தில் வளம் வந்துள்ளனர்.
அப்போது காதலர்களின் வாகனத்தை நிறுத்தி கையில் எவ்வளவு பணம் இருக்கிறது பேக்கில் பணம் உள்ளதா கூகுள் ப்ளே, phone pay ஏதாவது வைத்திருக்கிறீர்களா என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர். மறுத்தால் உங்களை காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பயந்து போன காதலர்கள் ஏடிஎம்மில் இருந்து 2000 பணம் அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ரோந்து பணியில் போலீசார்
அப்போது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரித்தனர். இதையடுத்து நாங்கள் போலீஸ் நீங்கள் யார் என காவல்துறையினிடமே கேட்டுள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனே அவ்விருவரையும் பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
கேளம்பாக்கம் போலீசார் விசாரணை
சென்னை பெரும்பாக்கம் தில்லைநாயகம் தெருவை சேர்ந்த கலீல் (வயது 42) (Kaleel) என்பதும் கந்தன்சாவடி தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருவதும் மற்றொருவர் அதே நிறுவனத்தில் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வரும் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் (வயது 26) பிஇ பட்டதாரி என்பதும் தெரியவந்தது.
பின்னர் கேளம்பாக்கம் போலீசார் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 392 பிரிவின் படி வழக்கு பதிவு செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)