மேலும் அறிய

கரூரில் ஆன்லைன் மூலம் ரூ. 6 3/4  லட்சம் மோசடி - பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

கரூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் ரூ.6 3/4  லட்சம் மோசடி ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்களை கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

 


கரூரில் ஆன்லைன் மூலம் ரூ. 6 3/4  லட்சம் மோசடி - பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

கரூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும் தான் யு.கே.வில் இயங்கி வரும் ஐஸ் போர்ட்ஸ் டிரேடர் என்ற டிரேடிங் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுடன் சேர்ந்து ஐஸ்போர்ட்ஸ் டிரேடர்.காம் என்ற வெப்சைட் மூலம் மடா டிரேடு 5 என்று அப்ளிகேஷனில் டிரேடிங் செய்தால் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி நம்ப வைத்துள்ளார்.

மேலும், பணத்தை வைத்து உண்மையாக டிரேடிங் செய்வது போன்ற தோற்றத்தினை மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷனில் காண்பித்துள்ளார். ஆனால் அவர், தொடர்ந்து நஷ்டம் அடைந்து வந்துள்ளார். இதனால் மீதமுள்ள தொகையாவது எடுக்க ஸ்டாலின் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கும் பல சேவை கட்டணம், வரித்தொகை என பல காரணங்களை கூறி ரூ.6 லட்சத்து 79  ஆயிரத்தை ஆன்லைன் மூலம் மோசடியாக பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

 


கரூரில் ஆன்லைன் மூலம் ரூ. 6 3/4  லட்சம் மோசடி - பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

இதுதொடர்பாக ஸ்டாலின் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கர்நாடக மாநிலத்தினை சேர்ந்த தனியார் கம்பெனியின் அக்கவுண்டிற்கு பணம் சென்றுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுபடி கரூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையில் போலீசார் கர்நாடக மாநிலத்துக்குச் சென்று இந்த தனியார் கம்பெனியின் இயக்குனர்களான பிரவீன் குமார் மற்றும் நவீன் குமார் ஆகியோரின் செல்போன் எண் இருப்பிடத்தை வைத்து கே.ஆர்.புரம், பெங்களூரு என்ற முகவரிக்கு சென்று விசாரித்தனர்.

இதில் குற்றசம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசார ணையில் பிரவீன்குமார் நண்பர் விஷால்பவார் என்பவர் கொடுத்தயோசனையின்படி இவர்கள் வெளிநாட்டு கம்பெனியில் வேலைபார்க்கும் போரிஸ் என்பவருடன் சேர்ந்து மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷன் மூலம் பொதுமக்களை கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்யவைத்து அதன் மூலம் டிரேடிங்செய்து அதில் லாபம் சம்பாதிப்பது போன்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

2 வாலிபர்கள் கைது

 

 


கரூரில் ஆன்லைன் மூலம் ரூ. 6 3/4  லட்சம் மோசடி - பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

 

இதில் வெளிநாட்டு கம்பெனியின் சேல்ஸ் டீம் பொது மக்களிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி இவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை போட செய்வார்கள் எனவும், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு ஈடாக மடா அப் ளிகேஷனில் கிரிப்டோகரன் சிகளை காண்பித்து, பின்னர் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை வைத்து, இவர்கள்குறைவான விலைக்கு கிரிப்டோ கரன்சிகளை வாங்கி போரிஸ் போன்ற வெளிநாட்டினர் சொல்லும் வாலட்டிற்கு தங்களது கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு மீதம் உள்ளவற்றை அனுப்பிவிடுவார்கள் என்றும் தெரியவந்தது. இத னையடுத்து பிரவீன்குமார் (வயது 29), விஷால்பவார் (29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் பண மும், குற்ற செயலுக்கு பயன்ப டுத்திய வங்கி கணக்கு புத்த கங்கள், காசோலைகள், கிரி டிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Embed widget