மேலும் அறிய

கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

கரூர் தனியார் பள்ளி வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், திடீர் திருப்பமாக பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் இன்று திருச்சி அருகே துறையூர் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை

கடந்த 19. 11. 2021 வெள்ளிக்கிழமை மாலை வெண்ணை மலை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துவரும் பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி கடிதத்தில் உள்ள பதிவுகள் மூலம் குற்றவாளியை தேடி வந்த நிலையில் அவரது அலைபேசி மற்றும் இன்னும் பல்வேறு தகவல் அடிப்படையில் அவர் பள்ளியில் வகுப்பு மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்று மாலை கரூர் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்ற 42 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் தனது மாமனார் வீடு அமைந்திருக்கும் துறையூர் செங்காட்டுபட்டி பகுதியில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

தனியார் பள்ளியில் இவர் பதினொன்றாம் வகுப்பு கணித பாடப்பிரிவில் பாடம் எடுத்து வந்த நிலையில் இவருக்கு மனைவியும், தாயும், தந்தையும் ,இரண்டு குழந்தைகளும் உள்ளனர். காமராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவர் சொந்த ஊர் கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியாகும். இவர் துறையூர் பகுதியில் அவருடைய மாமனார் நடராஜ் இல்லத்தில் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

இவர் இன்று தனியார் பள்ளியில் காலை பணிக்கு வந்து மதியம் பள்ளி நிர்வாகத்திடம் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் இறப்பு, தொடர்ந்து தனியார் பள்ளியில் படித்த மாணவியின் வழக்கை விசாரித்து வரும் போலீசாரின் கவனத்துக்கு வந்துள்ளது.  இவருக்கும் பள்ளி மாணவிக்கும் தொடர்பு உண்டா அல்லது என்ன காரணத்திற்காக இவர் தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

துறையூர் பகுதி செங்காட்டுபட்டி சேர்ந்த பகுதியில் அவர் இறந்ததால், அவரது உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக துறையூர் போலீசார் வெங்கமேடு போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மாணவியின் தற்கொலை வழக்கில் விசாரித்து வந்த 6 தனிப்படை போலீசார், இந்த தற்கொலை சம்பவம், மாணவியின் தற்கொலைக்கு முடிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget