மேலும் அறிய

Crime: கரூரில் சமூக ஆர்வலர் கொலை; 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை

விவசாயி ஜெகநாதன் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இதேபோல் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை, சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிலை அருகே உள்ள காளிபாளையத்தில் செல்வகுமாருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் அமைந்துள்ளது.

 


Crime: கரூரில் சமூக ஆர்வலர் கொலை; 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை

                                               கல்குவாரியின் உரிமையாளர் செல்வகுமார் புகைப்படம்

 

செல்வகுமார் என்பவரின் கல்குவாரி கடந்த 2015 ம் ஆண்டு அனுமதி முடிந்த நிலையில் தொடர்ந்து அரசு அனுமதி பெறாமல் கல்குவாரியை செயல்படுத்தி வந்தனர். அதை தொடர்ந்து ஜெகநாதன் கரூர் மாவட்ட கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தார். கல் குவாரிக்கு எதிராக புகார் கொடுத்து வரும் விவசாயி ஜெகநாதனை குவாரி உரிமையாளர் செல்வகுமார் கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கூலி படை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்தினர் அப்போது அருவா வெட்டுடன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

அது தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு க.பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது வரை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெகநாதன் மீண்டும் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

 


Crime: கரூரில் சமூக ஆர்வலர் கொலை; 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை

                                                         கல்குவாரியின் ஓட்டுனர் சக்திவேல் புகைப்படம்

 

இதனை அடுத்து மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்கு சொந்தமான கல்குவாரி சட்ட விரோதமாக இயங்கியதால் கரூர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் மூலமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை க. பரமத்தி அருகே காருடயம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்கு சொந்தமான பொலிரோ வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. 

 


Crime: கரூரில் சமூக ஆர்வலர் கொலை; 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை

 

                                                   கல் குவாரியின் ஓட்டுனரின் உதவியாளர் ரஞ்சித் புகைப்படம்

க.பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு  உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விபத்து வழக்காக பதிவு செய்ய காவல்துறை முயன்றுள்ளனர். இந்த நிலையில் சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமான ஜெகநாதனை, கல் குவாரி உரிமையாளர் லாரி ஏற்றி கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

அதைத்தொடர்ந்து சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் வழக்கறிஞர் குணசேகரன், முகிலன், சண்முகம் உள்ளிட்டோர் உயர் காவல்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்ததுள்ளனர். அதைத்தொடர்ந்து க.பரமத்தி காவல்துறையினர் கொலை வழக்காக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

 



Crime: கரூரில் சமூக ஆர்வலர் கொலை; 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை

                               கல்குவாரி பிரச்சனையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் புகைப்படம்

கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், கல்குவாரி வேன் ஓட்டுனர் சக்திவேல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதன் மரண விவகாரத்தில் இறப்பிற்கு முன்பே தனக்கு ஆபத்து இருப்பதாக கூறியதாக ஜெகநாதனின் மகன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இறந்து போன விவசாயி ஜெகநாதனின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தனது தந்தை இறப்பிற்கு முன்பாக கல்குவாரி உரிமையாளர் மூலமாக எந்த நேரமும் தனக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். 

மேலும், சமூக ஆர்வலர்கள் முகிலன், குணசேகரன் உள்ளிட்டோர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி ஜெகநாதன் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இதேபோல் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Rs 1000 Incentive For Rural School Girls: 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!
உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையா? 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Embed widget