மேலும் அறிய

Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருட்டுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம்.

முன் விரோதத்தில் கிணற்றில் தள்ளி பெண் கொலை

கரூர் மாவட்ட, தோகைமலை அருகே முன் விரோதத்தில் களை குத்தியால் பெண்ணை தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

தோகை மலையை அடுத்த பில்லூர் பஞ்சாயத்து பெரிய வீட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி 45. இவரது மனைவி வசந்தா 39. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது வயலுக்கு களை எடுக்கச் சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் வசந்தாவை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது விவசாயத் தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் இரவு வசந்தா சடலம் மிதந்தது. தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

முன்விரோத காரணமாக கொலையான வசந்தா புகைப்படம்

மேலும், தோகைமலை போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மனைவியின் சாவில் சந்தேகமுள்ளதாக முத்துசாமி தோகைமலை போலீசில் புகார் அளித்தார் . அதன் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சரோஜா வசந்தா கொலை செய்தது தெரியவந்தது. 

 



Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருடுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

இந்நிலையில், நேற்று முன்தினம் வசந்தா வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த சரோஜாவை கண்டு எச்சில் துப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் களை குத்தியால் வசந்தாவை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர், அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சரோஜாவை போலீசார் கைது செய்தனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

 

உறவினர்கள் சாலை மறியல். 

சரோஜாவுக்கு உடந்தையாக அவரது கணவர் முருகேசன், மருமகள் ஆகியோர் இருந்ததாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வசந்தாவின் குடும்பத்தினர் உறவினர்கள் குளித்தலை மணப்பாறை சாலையில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நேற்று மதியம் 2 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சரோஜாவை போலீசார் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
Embed widget