மேலும் அறிய

Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருட்டுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம்.

முன் விரோதத்தில் கிணற்றில் தள்ளி பெண் கொலை

கரூர் மாவட்ட, தோகைமலை அருகே முன் விரோதத்தில் களை குத்தியால் பெண்ணை தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

தோகை மலையை அடுத்த பில்லூர் பஞ்சாயத்து பெரிய வீட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி 45. இவரது மனைவி வசந்தா 39. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது வயலுக்கு களை எடுக்கச் சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் வசந்தாவை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது விவசாயத் தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் இரவு வசந்தா சடலம் மிதந்தது. தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

முன்விரோத காரணமாக கொலையான வசந்தா புகைப்படம்

மேலும், தோகைமலை போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மனைவியின் சாவில் சந்தேகமுள்ளதாக முத்துசாமி தோகைமலை போலீசில் புகார் அளித்தார் . அதன் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சரோஜா வசந்தா கொலை செய்தது தெரியவந்தது. 

 



Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருடுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

இந்நிலையில், நேற்று முன்தினம் வசந்தா வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த சரோஜாவை கண்டு எச்சில் துப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் களை குத்தியால் வசந்தாவை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர், அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சரோஜாவை போலீசார் கைது செய்தனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

 

உறவினர்கள் சாலை மறியல். 

சரோஜாவுக்கு உடந்தையாக அவரது கணவர் முருகேசன், மருமகள் ஆகியோர் இருந்ததாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வசந்தாவின் குடும்பத்தினர் உறவினர்கள் குளித்தலை மணப்பாறை சாலையில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நேற்று மதியம் 2 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சரோஜாவை போலீசார் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget