மேலும் அறிய

காஞ்சிபுரம் : வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் - முழு பின்னணி தகவல்கள்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தம்பதியிடம் வழிப்பறி செய்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தம்பதிக்கு தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் 'தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை' கொண்டாடப்பட்டது, பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, சென்னையில் பணிபுரிந்த பல ஊழியர்கள் தங்களது சொந்த கிராமத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர். இதனால் சென்னையை ஒட்டி இருந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து மிக அதிகமாக இருந்தது.
 
அவ்வகையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழம்பி அருகே தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த ஒரு தம்பதியினர் சாலையோரம் ஓய்விற்காக காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு சென்னை ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொரட்டூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியம் வேலூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் அங்கு வந்தார்.
 
"சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்"
 
பொங்கல் விடுமுறைக்காக தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சந்தேகம் கொண்டு காரின் முன்புறம் வழிமறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி காரில் இருந்த நபர்களிடம் தான் ஒரு போலீஸ் என்பதால் மிரட்டல் தொணியில் விசாரணை மேற்கொண்டு இருந்தார். இதனை அவ்வழியாக ரோந்து வந்த காவல் உயர் அதிகாரி ஒருவர் சாலையில் ஓரம் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டு அருகில் சென்று விசாரித்துள்ளார்.
 
தீவிர விசாரணை
 
அப்போது காவலர் அவரை யாரென தெரியாமல் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் பணிபுரிவதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி காவலர் பிரபாகரன் மற்றும் காரில் இருந்தவர்களை பாலு செட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் காவலர் பிரபாகரன் காஞ்சிபுரத்தில் பணிபுரிவதாக பொய்யாக கூறியதையடுத்து, ஆய்வாளர் அவரை தீவிர விசாரணை நடத்தி , காரில் பயணம் செய்த நபர்களிடம் புகார் பெற்று அவர் மீது மிரட்டியது, வழிப்பறி நோக்கில் செயல்பட்டது என வழக்கு பதிந்து கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
"காவலர் கைது"
 
கடந்த ஒரு மாதமாக ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் காவலர் உடை அணிந்து நள்ளிரவில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தவறான செய்கையில் ஈடுபடுவது, அவர்களிடமிருந்து செல்போன் பணம் நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தல் உள்ளிட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டது அவர்களிடமிருந்து, கத்தி வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரை ஒருவரை காவல் துறையினர் சுட்டுப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இச்செயல்கள் நடைபெற்று வருவதை தடுக்கும் விதமாகவே கடந்த 5 நாட்களாக சென்னை - திருச்சி , சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறை தீவிர வாகன போந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் காவலர் பிரபாகரன் வழிப்பறி முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் காவலர்கள் என்றால் தங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சம்பவம் நடைபெற்றால் மட்டுமே நேரடியாக அதில் ஆஜராக வேண்டும் எனவும், பிற காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்றால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
Minister Ramesh: விஜய் சாதி பார்த்து அறநிலையத்துறை கொடுத்தாரா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: விஜய் சாதி பார்த்து அறநிலையத்துறை கொடுத்தாரா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!
Gold rate today : 2 நாட்களாக அடுத்தடுத்து குறையும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
2 நாட்களாக அடுத்தடுத்து குறையும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Nainar Nagendran vs Vijay : கொடும் குற்றவாளிகள் தான் விஜய்யின் MLA-க்கள்.! இது தான் மாற்று அரசியலா.? சீண்டும் நயினார் நாகேந்திரன்
கொடும் குற்றவாளிகள் தான் விஜய்யின் MLA-க்கள்.! இது தான் மாற்று அரசியலா.? சீண்டும் நயினார் நாகேந்திரன்
TVK Vijay: MLA கூட வேண்டாம், ஆனா டெல்லியை கோட்டை விட்றாதிங்கனா..! CM விஜய்க்கு தவெகவினர் கோரிக்கை
TVK Vijay: MLA கூட வேண்டாம், ஆனா டெல்லியை கோட்டை விட்றாதிங்கனா..! CM விஜய்க்கு தவெகவினர் கோரிக்கை
Embed widget