மேலும் அறிய

Crime: டீ கடையில் பிளான் போட்டு அடுத்த நொடியே மூட்டை மூட்டையாக செல்போன் கொள்ளை; சிக்கிய வட இந்திய கொள்ளையர்கள்

குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் வெகுவாக பாராட்டினார் .

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ஆப்பிள், ரெட்மி, ரியல்மீ, சாம்சங், விவோ போன்ற ரூ.43 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக அப்துல் ரஹீம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
 
மூட்டையில் செல்போனை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
 
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதத்தின் மூலம் ஷட்டரை உடைப்பதும், பின்னர் இருவர் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே சென்று கடையில் உள்ள செல்போன்களை கோணி பையில் மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. மேலும் இது குறித்து அப்துல் ரஹீம் அளித்த புகாரின் பேரில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Crime: டீ கடையில் பிளான் போட்டு அடுத்த நொடியே மூட்டை மூட்டையாக செல்போன் கொள்ளை; சிக்கிய வட இந்திய கொள்ளையர்கள்
 
 
4 பேர் கைது
 
இந்நிலையில்,  செல்போன்களை திருடிய வழக்கில் ஹரியானாவை சேர்ந்த இம்ரான், ஜாபித், அலிஜன், ஹமீது ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 4 பேரிடம் இருந்து 234 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் மதிப்பு 43 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
டீ குடிக்கும்போது போட்ட பிளான்
 
காவல்துறை நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே, பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் வட இந்தியாவில் இருந்து, லாரியில் கொண்டு வந்த கார்களை, துறைமுகத்தில் இறக்கிவிட்டு, செல்லும்பொழுது இரும்பு கழிவுகளை கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு வந்துள்ளனர்.


Crime: டீ கடையில் பிளான் போட்டு அடுத்த நொடியே மூட்டை மூட்டையாக செல்போன் கொள்ளை; சிக்கிய வட இந்திய கொள்ளையர்கள்
 
பின்னர் முகமூடியை பயன்படுத்தி, சுங்குவார்சத்திரம் பகுதியில் சதி வேலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சுங்குவார்சத்திரம் பகுதி அருகே, டீ குடித்துள்ளனர். அப்பொழுது, எதிரே செல்போன் கடை ஒன்று இருப்பதை நோட்டமிட்டுள்ளனர். செல்போன் கடையில் கொள்ளை அடித்தால், பெரிய லாபம் கிடைக்கும் என்பதை, கணித்த கொள்ளையர்கள் அடுத்த சில மணி நேரத்திலேயே திட்டம் தீட்டி கனகச்சிதமாக, மூட்டையில் செல்போன்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
 
 பாராட்டிய எஸ்.பி 
 
இந்தநிலையில், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினரை காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் பாராட்டினார். இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த எஸ்.பி.சுதாகர் கூறுகையில், சயின்டிஃபிக் முறையில், குற்றவாளிகளை ட்ரேஸ் செய்து விரைவாக பிடித்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். பொதுவாக தொழில் நிறுவனங்கள் புதிதாக யாராவது ஒருவரை, வேலையில் இணைக்கும் பொழுது போலீஸ் வெரிஃபிகேஷன் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறோம் .அதன் அடிப்படையிலேயே தற்போது நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.




Crime: டீ கடையில் பிளான் போட்டு அடுத்த நொடியே மூட்டை மூட்டையாக செல்போன் கொள்ளை; சிக்கிய வட இந்திய கொள்ளையர்கள்
 
தீரன் பட பாணியில் 
 
துரிதமாக, செயல்பட்ட ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மற்றும் காஞ்சிபுரம் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் தமிழ்நாட்டில் இருந்து, தப்புவதற்கு முன்பாகவே மடக்கி பிடித்துள்ளனர். தீரன் பட பாணியில் மற்றொரு விதமான புதிய கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Asaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Embed widget