மேலும் அறிய

நிலம் எடுப்பதில் நூதன முறைகேடு..! ஆந்திராவில் பதுங்கிய அரசு அதிகாரி..! கைதானது எப்படி ?

" அது ஒரு மோசமான முன்னுதாரணமாகி விடும். எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், அதிகாரி நர்மதா தண்டிக்கப்பட வேண்டியவர் "

காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக கடந்த 2019-ம் ஆண்டில்  ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும்போது, போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு, 20.52 கோடி ரூபாய் வழங்கியதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து சம்பந்தப்பட்ட, அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறி 

இவ்வழக்கே  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும் உள்ள நர்மதா நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் நர்மதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பரிசீலனை செய்த நீதிபதி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது தெரிந்தும், இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளதாக கருதுவதற்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரி நர்மதா விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதையடுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, நர்மதா மனுத் தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், அதிகாரி நர்மதா தண்டிக்கப்பட வேண்டியவர். அவருக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படு கிறது என்று உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி உத்தரவில் இருப்பது என்ன ?

 நீதிமன்ற உத்தரவை முறையாக புரிந்து கொள்ளவில்லை தவறுதலாக கருதி விட்டதாக, நர்மதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், எந்த அடிப்படையும் இல்லை. மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில், ஐந்து ஆண்டுகளாக இருந்துள்ளார். சாதாரணமாக, ஒரே பதவியில் ஐந்து ஆண்டுகளாக ஒரு அதிகாரியை பணியாற்ற அனுமதிப்பது இல்லை. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முழுமையாக நர்மதாவுக்கு தெரியும் என்பதால், தற்போது தனக்கு தெரியாது என அவர் கோர முடியாது.

அரசு அதிகாரிகள், நிர்வாகத்தின் அங்கம். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள். அவர் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்டால், அது ஒரு மோசமான முன்னுதாரணமாகி விடும். எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், அதிகாரி நர்மதா தண்டிக்கப்பட வேண்டியவர். அவருக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இதனால், தான் கைது செய்யப்படலாம் என அறிந்த நர்மதா ஆந்திராவில் ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், தலைமறைவாக இருந்த நர்மதாவை கைது செய்தனர். மேலும், நர்மதாவுக்கு உதவிய அவரது சகோதரியையும் கைது செய்தனர்

தலைப்பு செய்திகள்

சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget