மேலும் அறிய

‘உடல் முழுவதும் வீக்கங்கள் உள்ளன; என் மகனை அடித்தே கொன்று விட்டார்கள்’ - கண்ணீர் வடிக்கும் தாய்

உயிரிழந்த சிறுவனின் உடல் செங்கல்பட்டு அருகே தகனம் செய்யப்பட்டது.

பேட்டரிகளை திருடிய வழக்கு
 
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள கன்னடபாளையம், குப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பழனி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 3 பெண் பிள்ளையும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் (சீர்திருத்தப்பள்ளி) பள்ளியில் 6 மாதம் கைதியாக இருந்து வந்துள்ளார் . 17 வயது சிறுவன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

‘உடல் முழுவதும் வீக்கங்கள் உள்ளன; என் மகனை அடித்தே கொன்று விட்டார்கள்’ - கண்ணீர் வடிக்கும் தாய்
 
இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருக்கும் பேட்டரிகளை திருடிய வழக்கு சம்பந்தமாக கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து . ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டிசம்பர் 30 தேதி மாலை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி விட்டு செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் பிரியாவின் மூத்த மகனை அடைத்துள்ளனர்.
 
மகன் சாவில் மர்மம்
 
இதனை அடுத்து டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பிரியாவிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட  காவலர்கள் 'உன்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லை ' என தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி, வாயிலாக தகவல் தெரிவித்த காவலர்கள் மிக மோசமான நிலையில் மகன் இருப்பதாகும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போலீசார் மகன் உயிரிழந்ததாக தாயிடம் தெரிவித்துள்ளனர். தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தாய் தொடர்ந்து குற்றச்சாட்டை தெரிவித்து வந்தார்.

‘உடல் முழுவதும் வீக்கங்கள் உள்ளன; என் மகனை அடித்தே கொன்று விட்டார்கள்’ - கண்ணீர் வடிக்கும் தாய்
 
இடுகாட்டில் தகனம் 
 
இந்த நிலையில் நேற்று நீதிபதி ரீனா முன்னிலையில் மருத்துவர் குழுவினர், உயிரிழந்த 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ உடலை உடற்கூறு செய்தனர். உடற்கூறாய் செய்யும் பொழுது முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தற்பொழுது நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிபதி கொடுக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உடலை பெற்றுக் கொண்ட தாய் பிரியா, செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பழவேலி இடுகாட்டில் தகனம் செய்தார்.

‘உடல் முழுவதும் வீக்கங்கள் உள்ளன; என் மகனை அடித்தே கொன்று விட்டார்கள்’ - கண்ணீர் வடிக்கும் தாய்
 
தண்டிக்க வேண்டும் 
 
முன்னதாக  உயிரிழந்த மகனின் உடலை தாய் பிரியா பார்த்து உள்ளார். மேலும் தனது மகனின் உடலில் அனைத்து இடங்களிலும் காயம் இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறுகையில்,தனது மகனின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. கண்ணம், உதடு, தாடை, இரண்டு கைகள் மற்றும் முதுகு,  பின்புறம் ஆகிய பகுதிகளில் பிரம்பால் அடித்தது போல் காயம் உள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் . தனது மகனின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் , எனக்கு பணம் உள்ளிட்டவை எதுவும் தேவையில்லை. மேலும் இரண்டு நாளாக என் மகனின் உடலை கூட பார்க்க முடியாமல், என்னை மிரட்டி வந்தவர்களையும், தண்டிக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget