மேலும் அறிய

9 வகுப்பு சிறுமியை மூன்று மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடூரம் : ஜார்க்கண்ட்டில் பயங்கரம்..

வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. போலீசார் விரைவில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவார்கள்

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவில்லாமல் கடந்துகொண்டிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் மூன்று பேரால் கடத்தப்பட்டு மூன்று மாதங்களாக  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்ததாக தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் விஷ்ணுகுமார், மந்தோஷ் மற்றும் மனோஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று கூறினார். சிறுமி காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு, குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஏப்ரல் 20 அன்று காணாமல் போனவர் குறித்து புகார் அளித்ததாக பிரபல செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புகாரை போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மகள் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்குமாறும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


9 வகுப்பு சிறுமியை மூன்று மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடூரம் : ஜார்க்கண்ட்டில் பயங்கரம்..

அந்தப் பெண் கடத்திச் செல்லப்பட்ட ஆட்டோ


வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. போலீசார் விரைவில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவார்கள்” என்று நகர டிஎஸ்பி  குல்தீப் குமார் கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்ய முயற்சித்து வருவதாக டிஎஸ்பி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பியபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட மூவரால் சிறுமி கடத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஆட்டோரிக்ஷாவில் இழுத்துச் சென்று முகத்தில் துணியைக் கட்டியுள்ளனர்.

சிறுமி தெலிதிஹ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஒரு அறையில் அடைத்துவிட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் வாயில் துணியைக் கட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 19-ம் தேதி பூட்டை உடைத்து தப்பிச் சென்ற சிறுமியை அக்கம்பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பின்னர், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். கடந்த ஜூலை 24 அன்று, சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் பொகாரோ மகளிர் காவல் நிலையத்தை அடைந்து இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். அந்தப் பெண் தற்போது தனது பெற்றோருடன் பாதுகாப்பாக உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget