மேலும் அறிய

9 வகுப்பு சிறுமியை மூன்று மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடூரம் : ஜார்க்கண்ட்டில் பயங்கரம்..

வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. போலீசார் விரைவில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவார்கள்

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவில்லாமல் கடந்துகொண்டிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் மூன்று பேரால் கடத்தப்பட்டு மூன்று மாதங்களாக  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்ததாக தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் விஷ்ணுகுமார், மந்தோஷ் மற்றும் மனோஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று கூறினார். சிறுமி காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு, குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஏப்ரல் 20 அன்று காணாமல் போனவர் குறித்து புகார் அளித்ததாக பிரபல செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புகாரை போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மகள் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்குமாறும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


9 வகுப்பு சிறுமியை மூன்று மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடூரம் : ஜார்க்கண்ட்டில் பயங்கரம்..

அந்தப் பெண் கடத்திச் செல்லப்பட்ட ஆட்டோ


வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. போலீசார் விரைவில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவார்கள்” என்று நகர டிஎஸ்பி  குல்தீப் குமார் கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்ய முயற்சித்து வருவதாக டிஎஸ்பி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பியபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட மூவரால் சிறுமி கடத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஆட்டோரிக்ஷாவில் இழுத்துச் சென்று முகத்தில் துணியைக் கட்டியுள்ளனர்.

சிறுமி தெலிதிஹ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஒரு அறையில் அடைத்துவிட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் வாயில் துணியைக் கட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 19-ம் தேதி பூட்டை உடைத்து தப்பிச் சென்ற சிறுமியை அக்கம்பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பின்னர், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். கடந்த ஜூலை 24 அன்று, சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் பொகாரோ மகளிர் காவல் நிலையத்தை அடைந்து இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். அந்தப் பெண் தற்போது தனது பெற்றோருடன் பாதுகாப்பாக உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Embed widget