மேலும் அறிய

கிளியை கொடுமைப்படுத்திய ஜோசியர்கள்... சுதந்திரமாக பறக்கவிட்ட வனத்துறையினர்.. என்ன நடந்தது?

கிளிகளில் பிடித்து காட்டுக்குள் பறக்க விட்ட வனத்துறை

உயிரின சட்டத்தை மீறி பச்சை கிளிகளை மர கூண்டுகளில் அடைத்து வைத்து கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரை அதிரடியாக கைது செய்த திருப்போரூர் வனத்துறை அதிகாரிகள் 7 கிளிகளை சுதந்திரமாக பறக்க விட்டனர், மீண்டும் இதுபோன்ற செயல்படாதவாறு அபராதம் விதித்து அறிவுரை வழங்கி   அனுப்பினார்.

கிளியை கொடுமைப்படுத்திய ஜோசியர்கள்... சுதந்திரமாக பறக்கவிட்ட வனத்துறையினர்.. என்ன நடந்தது?
 
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வனத்துறையினருக்கு கிளிகளை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் செய்வதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் வனத்துணை அலுவலர் கல்யாண் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் மூன்று குழுவாகப் பிரிந்து   திருப்போரூர் முருகன் கோவில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில், கோவளம் கடற்கரை மற்றும் மாமல்லபுரம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டபோது மரப்பெட்டியில் அடக்கி வைக்கப்பட்ட கிளிகளை வைத்து ஜோசியம் பார்த்த ஏழு பேரை கைது செய்த  வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்தனர்.

கிளியை கொடுமைப்படுத்திய ஜோசியர்கள்... சுதந்திரமாக பறக்கவிட்ட வனத்துறையினர்.. என்ன நடந்தது?
அப்போது, அருகில் உள்ள காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில், மற்றும் மரங்களில் கூடு கட்டி வைத்திருக்கும் பச்சை கிளி குஞ்சுகளை பிடித்து  வளர்த்து வருவதாகவும் பின்னர் அது வளர்ந்த பிறகு  பச்சை கிளிகளை பறந்து செல்லாமல் இருக்க இறக்கைகளை வெட்டி மரப்பெட்டி கூண்டுகளில் அடைத்து வைத்து அவர்களுடன் பழக வைப்பதாகவும், நெல், சோளம், போன்ற தானியங்கள் கொடுத்து ஜோசியக்காரர்கள் சொல்லும் பேச்சை கேட்கும் அளவிற்கு பழகி கொண்டதாகவும் இதில் ஒரு சில கிளிகள் மனிதன் நாம் பேசும் ஒருசில வார்த்தைகளையும் கிளிகளை பேச வைத்துள்ளனர்.
 
அந்த கிளிகளை வைத்து கோயில் திருவிழா நேரங்கள், கடற்கரைப் பகுதிகளில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஜோசியம் பார்த்து வந்ததும் இதனால் கிளிகளை வைத்து பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது,

கிளியை கொடுமைப்படுத்திய ஜோசியர்கள்... சுதந்திரமாக பறக்கவிட்ட வனத்துறையினர்.. என்ன நடந்தது?
பின்னர் வனச்சரக அலுவலர் கல்யாண், தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் கிளைகளை துன்புறுத்தியதாக  ஜோசியக்காரர்கள் மீது வன உயிரின சட்டம் 1972 படி அவர்களிடம் 2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து இனி இது போன்று நடக்காமல் இருக்க அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர். இதில்  சுப்பிரமணியன், தங்கமாரி, வள்ளிநாயகம், மாரியப்பன், முப்புடாதி, குமார், பரமசிவன், ஆகிய 7 பேர் மீதும் வனத்துறை சட்டப்படி அதிரடியாக  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிளியை கொடுமைப்படுத்திய ஜோசியர்கள்... சுதந்திரமாக பறக்கவிட்ட வனத்துறையினர்.. என்ன நடந்தது?
மேலும் கிளிகளுக்கு ரக்கைகள் வெட்டப்பட்டதால் பறக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் இறக்கைகள் சிறிது வளர்ந்ததும் மரக்கூடுகளில் அடைத்து வைக்கப்பட்ட கிளிகளை சுதந்திரமாக இள்ளலூர் காப்பு காட்டில் வனத்துறையினர் இன்று பறக்க விட்டதில் கிளிகள் சுதந்திரமாக பறந்து சென்றது. இது போன்று இனி வரும் காலங்களில் கிளிகளை மரப்பெட்டியில் அடைத்து வைத்து துன்புறுத்தி வரும் நபர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை கைது செய்து சிறையில் வைக்கப்போவதாக வனத்துறை அலுவலர் கல்யாண் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget