மேலும் அறிய

Crime: பூட்டிய காருக்குள் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது - தஞ்சை போலீஸ் தீவிர விசாரணை

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தவர் யார் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (36 ). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு கோவையில் நடந்த தனது அலுவலக கூட்டத்திற்கு சென்றார்.

பின்னர் 2 நாட்கள் கழித்து நேற்றுமுன்தினம் இரவு தஞ்சைக்கு வந்த அவர் தனது காரை எடுக்க முயன்றார். அப்போது கார் கதவு திறந்திருந்தது கண்டு அதிர்சசியடைந்தார். காருக்குள் பார்த்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்‌. உடன் இதுகுறித்து அருண்குமார் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காருக்குள் பார்வையிட்டபோது இறந்து கிடந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது.

அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகி இருந்தது. இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் காருக்குள் பிணமாகக் கிடந்தவர் தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பது தெரிய வந்தது.

அவர் பாப்பாநாட்டில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் சரியாக பூட்டப்படாத அருண்குமாரின் காரின் கதவை திறந்து உள்ளே சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்போது கார் உள் பக்கமாக பூட்டப்பட்டு விட்டது. இதனை அறியாத மணிகண்டன் காருக்குள்ளே இருந்துள்ளார். சிறிது நேரத்தில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி மணிகண்டன் காருக்குள்ளே இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகியது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருந்தாலும் மணிகண்டன் மூச்சு திணறி தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மணிகண்டன் மரணத்தின் உண்மை தன்மை தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

 




மினி லாரி திருடியவர் கைது


Crime: பூட்டிய காருக்குள் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது - தஞ்சை போலீஸ் தீவிர விசாரணை
தஞ்சை மானோஜிபட்டி, ஈஸ்வரி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மினி லாரிகள் தொடர்ந்து திருட்டுப் போனது. குறிப்பாக வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரிகள் திருடப்பட்டது. இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பட்டுக்கோட்டை கோட்டை அல்லி கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (38)  என்பவர் மினி லாரிகளை கடத்தியது  தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Oct 5: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Kulasai Dussehra 2024: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
Embed widget