மேலும் அறிய

Hyderabad: '' ஆணுறை வாங்கி இருக்காங்க.. எல்லாமே ப்ளான்!'' - ஹைதராபாத் வன்கொடுமையில் திடுக்கிடும் தகவல்கள்!

இது திடீரென நடந்த குற்றமில்லை என்றும் பக்காவாக ப்ளான் செய்யப்பட்ட ஒரு சம்பவம் என்றும் தற்போது போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தெலுங்கானா ஹைதராபாத்தில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது திடீரென நடந்த குற்றமில்லை என்றும் பக்காவாக ப்ளான் செய்யப்பட்ட ஒரு சம்பவம் என்றும் தற்போது போலீசார் குறிப்பிட்டுள்ளனர். குற்றவாளிகள் முன்னதாகவே ஆணுறை வாங்கி வைத்திருந்ததாகவும், எனவே இது திட்டமிடப்பட்ட குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், குற்றவாளிகள் ஏற்கெனவே ஆணுறை வாங்கி தயார் நிலையில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது திட்டமிடப்பட்ட ஒரு குற்றம். அவர்கள் ஆணுறை வாங்கியது எங்கே என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார். மேலும் குற்றம்சாட்ட 5 பேரின் செல்போன் அழைப்புகளையும், செல்போனில் பேசியவர்களின் விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேற்படி விசாரணைக்கு இது உதவுமென தெரிகிறது.


Hyderabad: '' ஆணுறை வாங்கி இருக்காங்க.. எல்லாமே ப்ளான்!'' - ஹைதராபாத் வன்கொடுமையில் திடுக்கிடும் தகவல்கள்!

முன்னதாக, கடந்த மே 28 ம் தேதியன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 மற்றும் 323 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் 10 வது பிரிவு 9 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணைக்கு பிறகு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் சிறுவர்கள்.ஒருவர் இளைஞர் ஆவார். 

அப்பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தன் வீட்டில் கூறாமலும், சிறுவர்கள் தன்னை அவமானப் படுத்தியதாக மட்டுமே கூறிய நிலையில், இது குறித்து வழக்கு பதியப்பட்டது. ஆனால், தொடர்ந்து சிறுமியின் உடலில் இருந்த காயங்களால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் தன்னிடம் சில சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு போக்சோ வழக்காக மாற்றப்பட்டு சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னை மருத்துவ பரிசோதனை செய்த பெண் ஊழியரிடம் தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உண்மையை சிறுமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!
சீர்காழி பள்ளி சர்ச்சை: மாணவி தற்கொலை முயற்சி... ஆசிரியர் இடமாற்றம்... மாணவர் மறியல்!
சீர்காழி பள்ளி சர்ச்சை: மாணவி தற்கொலை முயற்சி... ஆசிரியர் இடமாற்றம்... மாணவர் மறியல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
China Warning to Nepal: இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
"விடிவெள்ளி திட்டம் முதல் புதிய கான்கிரீட் வீடுகள் வரை.." சமூக நலத்துறையில் பொன்னான 20 அறிவிப்புகள் - என்னென்ன?
Russia Ukraine War: உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
Embed widget