மேலும் அறிய

Crime : அகற்றப்பட்ட அந்தரங்க பாகங்கள்...விரலுடன் தலையை வெட்டி கொடூரம்...முக்கோண காதல் கதையால் நேர்ந்த பகீர்

தெரிந்த நெருங்கிய நபர்களால்தான் பெரும்பாலான நேரங்களில் இம்மாதிரியான கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.

சமீப காலமாக, கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, தெரிந்த நெருங்கிய நபர்களால்தான் பெரும்பாலான நேரங்களில் இம்மாதிரியான கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. டெல்லியில் நடந்த கொடூர சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

தொடரும் கொடூரங்கள்:

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 22 வயது நபர் ஒருவர் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதற்காகவும் போன் செய்ததற்காகவும் தனது நண்பரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கொலை செய்யப்பட்ட நபரும் அவரது காதலியும் முன்னதாக உறவில் இருந்துள்ளார் என்பதுதான்.

அந்தரங்க உறுப்புகளை அகற்றிய கொடூரம்:

குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் தனது நண்பரின் தலையை துண்டித்து, அவரது இதயம் மற்றும் அந்தரங்க உறுப்புகளை அகற்றி, அவரது விரல்களை வெட்டியுள்ளார். பின்னர், நேற்று போலீஸ் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, "நவீனும் ஹரிஹர கிருஷ்ணாவும் தில்சுக்நகரில் உள்ள கல்லூரியில் இடைநிலைப் படிப்பை ஒன்றாக முடித்தனர். இந்த சம்பவத்திற்கு மையப்புள்ளியாக இருந்தவர் அதே கல்லூரியில் படித்த மாணவி.

முக்கோண காதல் கதையில் ட்விஸ்ட்:

இருவரும் அந்த பெண்ணை காதலித்துள்ளனர். இருப்பினும், நவீன் முதலில் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். நவீனின் விருப்பத்தை மாணவி ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், ஓரிரு ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்திருக்கின்றனர். அந்த மாணவியிடம் ஹரிஹர கிருஷ்ணா காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதை, அந்த மாணவி ஏற்று கொண்டு இருவரும் உறவில் இருந்துள்ளனர்.

பிரிந்த போதிலும், நவீன் அந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். மேலும் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதும் போன் செய்வதும் கிருஷ்ணாவை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா கொலை செய்யும் நோக்கத்துடன் மூன்று மாதங்களுக்கும் மேலாக காத்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, இருவரும் மது அருந்தி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கிருஷ்ணா நவீனை கொலை செய்துள்ளார். கிருஷ்ணா நவீனின் தலையை அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகள், இதயம் மற்றும் விரல்களை வெட்டியுள்ளார். பின்னர், கொல்லப்பட்ட நவீனின் புகைப்படங்களை எடுத்து தனது காதலிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது" 

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Embed widget