மேலும் அறிய

தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்... கொலை வழக்கான வழிப்பறி புகார் - சிக்கிய இளைஞர்!

கணவனே, மனைவியை கொலை செய்துவிட்டு வழிப்பறி நாடகமாடிய சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவருக்கும் சேலம் மாவட்டம் , ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த தரணி தேவி என்பவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் கவின் பிரசன்னா என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தனது தாயார் வீடான ஆத்தூருக்கு சென்று விட்டார். தரணிதேவி. நேற்று முன்தினம் சபரிநாதன் தனது மனைவியை சமரசம் செய்வதற்காக சென்று மனைவியுடனும், அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்.

அதற்குப்பின் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளன. மனைவியை  வீட்டுக்கு அழைத்துச்சென்ற நேரத்தில் வழிப்பறி நடந்தது என ஒரு புகார் ஒன்றை குமாரபாளையம் காவல் நிலையத்தில் தெரிவித்தார் சபரிநாதன். அந்த புகாரில், குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியான கோட்டைமேடு பகுதி மேம்பாலத்தில் வரும் பொழுது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் காரை வழிமறித்து தன்னையும், தனது மனைவியையும் தாக்கினர். மனைவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதில் மயக்கம் அடைந்த தனது மனைவியை பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச்சென்றேன். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’’ எனக் குறிப்பிட்டார்.


தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்... கொலை வழக்கான வழிப்பறி புகார் - சிக்கிய இளைஞர்!

இந்த புகாரின் அடிப்படையில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சபரிநாதன் கூறியதுபோல வழிப்பறி நடந்ததற்கான சம்பவங்கள் ஆதாரங்கள் ஏதும் இல்லாததால், தரணி தேவியின் கணவர் சபரிநாதன் மீது சந்தேகம் வலுத்தது.

இதனடிப்படையில் தனிப்படை போலீசார் சபரிநாதனை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சபரிநாதன் கல்லூரியில் படிக்கும் போதே அவருடன் படித்த ஒரு பெண்ணுடன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். தனியாக வீடு எடுத்தும் தங்கியுள்ளனர்.இவருக்கு மற்றொரு திருமணம் நிச்சயிக்கப்பட்டு  நடைபெற உள்ளதை தெரிந்துகொண்ட பெண், சபரிநாதன் அண்ணன் மோகனை தொடர்பு கொண்டு தாங்கள் தனியாக குடும்பம் நடத்தி வருவதாகவும், ஏற்கனவே இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்... கொலை வழக்கான வழிப்பறி புகார் - சிக்கிய இளைஞர்!

இதனிடையே பல பிரச்னைகளுக்கு நடுவே தரணி தேவியை திருமணம் செய்துள்ளார் சபரிநாதன்.

இந்த சூழ்நிலையில் ரேவதி, தரணி தேவிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஏற்கனவே எனக்கும் சபரிநாதனுக்கும் திருமணம் முடிந்ததால் நான் (ரேவதி) தான் முதல் மனைவி என்றும் சில போட்டோக்களை இணைத்தும் கடிதம் எழுதியுள்ளார். இது சபரி-தரணி இடையே புயலை கிளப்பியுள்ளது.இதனால் தான் தரணி தேவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு காரில் செல்லும் போதே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் தரணியின் கழுத்தை நெரித்ததால் அவர் உயிரிழந்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் சபரி. 

கணவனே, மனைவியை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" அப்பாகிட்ட சொல்லாத " கள்ளக் காதலனுடன் சினிமாவுக்கு சென்ற தாய் - போட்டுக் கொடுத்த மகள்
சென்னையில் ஆந்திரப் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் !! 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
சென்னையில் ஆந்திரப் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் !! 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் !! அரிவாள்மனையால் மாமனாரை வெட்டிக் கொன்ற பரபரப்பு பின்னணி
ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் !! அரிவாள்மனையால் மாமனாரை வெட்டிக் கொன்ற பரபரப்பு பின்னணி
தனியார் ஆம்னி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை !! மருத்துவ கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
தனியார் ஆம்னி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை !! மருத்துவ கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget