மேலும் அறிய

அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை.. பாதிக்கப்பட்ட 2 பேர் நீதிபதியிடம் வாக்குமூலம்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட 2 பேர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.

விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் எழுந்த சர்ச்சையான புகார்களை தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கெடார் போலீசார் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 33 பெண்கள் உள்பட 142 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்டனர். இதே போல் அன்புஜோதி ஆசிரமத்தின் கிளை ஆசிரமமாக  வானூர் அருகே உள்ள கோட்டக்குப்பத்தில் ஒரு ஆசிரமம் இயங்கி வந்தது.

அந்த ஆசிரமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்த 12 பெண்கள் உள்பட 25 பேரை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட 167 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சற்று உடல்நலம் தேறியவர்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வளத்தி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் உள்ள அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆசிரமத்தில் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரும், அவரது தோழி ஒருவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அப்பெண்கள் இருவரும் அளித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட இன்னும் சில பெண்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் யார், யார் என கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் குண்டலப்புலியூர், கோட்டக்குப்பம் ஆகிய ஆசிரமங்களில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 45 பெண்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே ஆசிரமத்தினரால் இன்னும் எத்தனை பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்ற முழு விவரமும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

இதற்கிடையே பாலியல் குற்றம்சாட்டிய விழுப்புரம் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவரும் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரையும் நேற்று விழுப்புரம் நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அந்த பெண்கள் இருவரும், தங்களுக்கு நேர்ந்த அநீதிகள், தாங்கள் அனுபவித்த சித்ரவதைகள் குறித்து நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget