![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime: ஷாக்! முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை கொன்ற காதலன் - ஹரியானாவில் பயங்கரம்!
முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை, காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: ஷாக்! முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை கொன்ற காதலன் - ஹரியானாவில் பயங்கரம்! Gurugram Gurgoan Drunk Man Hacks Live In Partner To Death After She Refuses To Cook Egg Curry Arrested Crime: ஷாக்! முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை கொன்ற காதலன் - ஹரியானாவில் பயங்கரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/17/e5878a97b6594101cd5c836730b9183a1710684499543102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை, காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
முட்டை கறி சமைக்க மறுத்த காதலி:
இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை, காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே சௌமா என்ற கிராமத்தில் லல்லன் யாதவ் என்ற 35 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி (32) என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி இறந்துவிட்டதாக கூறி, டெல்லியில் இருந்து ஹரியானாவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஹரியானா வந்த இவர், சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு அஞ்சலியை சந்தித்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அஞ்சலி சடலமாக கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொலை செய்த காதலன்:
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்தனர். அப்போது, அஞ்சலியின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த லல்லன் யாதவ், அஞ்சலியிடம் முட்டை கறி கேட்டுள்ளார். அப்போது, முட்டை கறி சமைக்க மறுத்ததால், தனது காதலியிடம் லல்லன் யாதவ் சண்டை போட்டுள்ளார்.
இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அஞ்சலியை, லல்லன் யாதவ் பெல்ட்டால் கடுமையாக அடித்துள்ளார். அதோடு இல்லாமல், சுத்தியால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுராஹி கிராமத்தைச் சேர்ந்த யாதவ், டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான லல்லன் யாதவிடம் விசாரணை நடத்தியதில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. முட்டை கறி சமைக்க மறுத்தால், காதலியை கொலை செய்தது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)