மேலும் அறிய

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

கரூரில் பட்டதாரி பெண் ஒருவர் பலரிடம் ஆசை வார்த்தை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பல லட்சம் வரை மோசடி.

கரூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சௌமியா என்கின்ற சபரி வயது 28. பிகாம் பட்டதாரி. இவரது பெற்றோர் கரூரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது சகோதரி திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சௌமியா சிறு வயது முதலே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?


அவரது நடவடிக்கை பிடிக்காத அவருடைய பெற்றோர்கள் மகளை கண்டித்துள்ளனர். இதை அடுத்து பெற்றோர்களில் பிரிந்த சௌமியா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார். அப்பொழுது அவருக்கு ராஜேஷ் என்கின்ற போலீசார் உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் தனக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் நல்ல பழக்கம் உள்ளது. அதனால் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன். என்று கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார். பின்னர் தனது கணவரிடம் அந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை ஏமாற்றியுள்ளார்.

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

 

அதைத் தொடர்ந்து கரூரில் உள்ள மணவாடி பகுதிக்கு வந்து ரூ. 7 லட்சத்திற்கு ஒரு நிலத்தை சொந்தமாக வாங்கியுள்ளார். இதற்கிடையே மோசடி தொடர்பான புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் சௌமியாவை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த சௌமியா முதல் கணவரான போலீஸ்காரரை உதரி தள்ளிவிட்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருடன் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியவர் அவரையும் கழட்டி விட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து சொந்த மாவட்டமான கரூருக்கு வந்த சௌமியா காந்தி கிராமத்தில் குடியேறியுள்ளார்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

அங்கும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கிய அவர், தான் ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தனக்கு நெருங்கிய உறவினர் என்ற தகவலையும் பலரிடம் கூறி நம்ப வைத்து, உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கூறி 50 லட்சம் வரை பெற்று எந்த வேலையும் வாங்கி தராமல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதை எடுத்து மூன்றாவதாக மேலும், ஒருவரை சௌமியா திருமணம் செய்துள்ளார். மேலும், நான்காவது ஆக கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை திருமணம் செய்ய சௌமியா தயாராகி வந்துள்ளார். இதற்கிடையில் அடிக்கடி சௌமியா வீட்டை விட்டு மாயமாகியுள்ளார். இந்த நிலையில் சௌமியா காந்தி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை அடுத்து காந்திகிராமம் பகுதியில் சௌமியாவை, அவர்கள் கையும் களவுமாக பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

இதை எடுத்து சௌமியாவிடம் கரூர்  குற்றப்பிரிவு துணை  கண்காணிப்பாளர் சுகுமார், கரூர் நகரதுணை   கண்காணிப்பாளர்  தேவராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சௌமியா மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், அவர் எந்த வங்கிகளும் உதவி மேலாளராக பணிபுரி வில்லை எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து போலீசார் சௌமியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சௌமியா எத்தனை திருமணங்கள் செய்துள்ளார். எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்தார் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நீதிமன்றத்தில் சௌமியாவை ஆஜர் படுத்திய விசாரணை நடத்தினால் தான் முழு விவரம் தெரிய வரும் என கருர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கரூரில் பட்டதாரி பெண் ஒருவர் பலரிடம் ஆசை வார்த்தை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பல லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget