மேலும் அறிய

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

கரூரில் பட்டதாரி பெண் ஒருவர் பலரிடம் ஆசை வார்த்தை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பல லட்சம் வரை மோசடி.

கரூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சௌமியா என்கின்ற சபரி வயது 28. பிகாம் பட்டதாரி. இவரது பெற்றோர் கரூரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது சகோதரி திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சௌமியா சிறு வயது முதலே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?


அவரது நடவடிக்கை பிடிக்காத அவருடைய பெற்றோர்கள் மகளை கண்டித்துள்ளனர். இதை அடுத்து பெற்றோர்களில் பிரிந்த சௌமியா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார். அப்பொழுது அவருக்கு ராஜேஷ் என்கின்ற போலீசார் உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் தனக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் நல்ல பழக்கம் உள்ளது. அதனால் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன். என்று கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார். பின்னர் தனது கணவரிடம் அந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை ஏமாற்றியுள்ளார்.

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

 

அதைத் தொடர்ந்து கரூரில் உள்ள மணவாடி பகுதிக்கு வந்து ரூ. 7 லட்சத்திற்கு ஒரு நிலத்தை சொந்தமாக வாங்கியுள்ளார். இதற்கிடையே மோசடி தொடர்பான புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் சௌமியாவை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த சௌமியா முதல் கணவரான போலீஸ்காரரை உதரி தள்ளிவிட்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருடன் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியவர் அவரையும் கழட்டி விட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து சொந்த மாவட்டமான கரூருக்கு வந்த சௌமியா காந்தி கிராமத்தில் குடியேறியுள்ளார்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

அங்கும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கிய அவர், தான் ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தனக்கு நெருங்கிய உறவினர் என்ற தகவலையும் பலரிடம் கூறி நம்ப வைத்து, உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கூறி 50 லட்சம் வரை பெற்று எந்த வேலையும் வாங்கி தராமல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதை எடுத்து மூன்றாவதாக மேலும், ஒருவரை சௌமியா திருமணம் செய்துள்ளார். மேலும், நான்காவது ஆக கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை திருமணம் செய்ய சௌமியா தயாராகி வந்துள்ளார். இதற்கிடையில் அடிக்கடி சௌமியா வீட்டை விட்டு மாயமாகியுள்ளார். இந்த நிலையில் சௌமியா காந்தி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை அடுத்து காந்திகிராமம் பகுதியில் சௌமியாவை, அவர்கள் கையும் களவுமாக பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

இதை எடுத்து சௌமியாவிடம் கரூர்  குற்றப்பிரிவு துணை  கண்காணிப்பாளர் சுகுமார், கரூர் நகரதுணை   கண்காணிப்பாளர்  தேவராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சௌமியா மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், அவர் எந்த வங்கிகளும் உதவி மேலாளராக பணிபுரி வில்லை எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து போலீசார் சௌமியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சௌமியா எத்தனை திருமணங்கள் செய்துள்ளார். எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்தார் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நீதிமன்றத்தில் சௌமியாவை ஆஜர் படுத்திய விசாரணை நடத்தினால் தான் முழு விவரம் தெரிய வரும் என கருர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கரூரில் பட்டதாரி பெண் ஒருவர் பலரிடம் ஆசை வார்த்தை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பல லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
CM Vijay: சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
சிஎம் விஜய் பிடியில் செந்தில் பாலாஜி குடுமி.. ED கோரிக்கையை தவெக அரசு ஏற்குமா? திமுக மூவ் என்ன?
Tamilnadu Round Up: CM விஜயை பாராட்டிய வேலுமணி, அதிமுக மா.செ., கூட்டம், உதயநிதி அறிவிப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
CM விஜயை பாராட்டிய வேலுமணி, அதிமுக மா.செ., கூட்டம், உதயநிதி அறிவிப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
Toyota Upcoming Cars: டொயோட்டாவின் புது மெனு..! உள்ளூரிலேயே ரெடியாகும் 5 கார்கள், SUV, MPV, ஹைப்ரிட், EV - கம்மி விலை
டொயோட்டாவின் புது மெனு..! உள்ளூரிலேயே ரெடியாகும் 5 கார்கள், SUV, MPV, ஹைப்ரிட், EV - கம்மி விலை
Pereol Diesel Price: போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
போச்சு..! மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு - லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: நம்பி வந்தவர்களை கைவிட்டுவிட்டாரா விஜய்.? அரசு நியமனத்தில் புறக்கணிப்பு- கொதிப்பில் த.வெ.க வழக்கறிஞர்கள்
நம்பி வந்தவர்களை கைவிட்டுவிட்டாரா விஜய்.? அரசு நியமனத்தில் புறக்கணிப்பு- கொதிப்பில் த.வெ.க வழக்கறிஞர்கள்
Embed widget