மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி.. Event Management - ல் வேலை, பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் ஈடுபடுத்திய கும்பல்

வெளி மாநில பெண்களை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 10 பெண்கள் மீட்பு.

பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்

சென்னை சாலிகிராமம் பகுதியில் பெண்களுக்கு ஈவன்ட் மேனேஜ் மெண்ட்டில் வேலை இருப்பதாக கூறி வெளி மாநில பெண்களை வரவழைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,  உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு , கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகா அவர்களின் நேரடி மேற்பார்வையில் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில் விபச்சார தடுப்பு பிரிவு , காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர்  இரகசியமாக கண்காணித்து வந்தனர். 

பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த காவல் துறையினர்

இந்நிலையில் சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவில் Sri Sai Homes , மற்றும் அதே பகுதியில் காந்தி நகர் , பாரதி தெருவிலும் Sri Sai Homes ஆகிய முகவரியில் உள்ள வீடுகளில் வெஸ்லி (எ) ரஞ்ஜித் மற்றும் மாயா (எ) ஓம்காரேஷ்வரி ஆகிய இருவர் 10 பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வருவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் அவர்கள் தலைமையில் , விபச்சார தடுப்பு பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit-1) காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வீடுகளில் கண்காணித்து பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்து , சம்பவ இடத்தில் வைத்து அசோக்நகர் பகுதயை சேர்ந்த 1.வெஸ்லி (எ) ரஞ்ஜித் ( வயது 46 ) மற்றும் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 2.மாயா (எ) ஓம்காரேஷ்வரி ( வயது 32 ) ஆகிய இரு நபர்களை கைது செய்து , அவர்களது பிடியிலிருந்த கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 10 பெண்களை மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட 10 பெண்கள் சென்னை மயிலாப்பூர் அரசினர் மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

அவசரமாக போன் பேச வேண்டும் என செல்போனை வாங்கி , திருப்பி கேட்டவரை பிளேடால் தாக்கிய நபர்

இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த டிராவிட் ( வயது 23 ) என்பவர் சென்னை  அமைந்தகரை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த தினங்களுக்கு முன்பு இரவு நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது , அங்கு வந்த நபர் ஒருவர் மேற்படி டிராவிட்டிடம் அவசரமாக போன் பேச வேண்டும் எனக் கூறி செல்போனை வாங்கி அவரது பாக்கெட்டில் வைத்துள்ளார். டிராவிட் அவரிடம் செல்போனை திரும்ப கேட்ட போது., அந்த நபர் பிளேடால் டிராவிட்டை தாக்கியுள்ளார்.

டிராவிட் சுதாரித்துக் கொண்டு அவரது செல்போனை பிடுங்கியுள்ளார். அந்த நபர்  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து டிராவிட் K-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். K-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிக்க முயன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியை சேர்ந்த மணிரத்தினம் , ( வயது 29 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மனிரத்தினம் V-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் அவர் மீது ஏற்கனவே 15 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிரத்தினம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget