மேலும் அறிய

போலி அடையாள அட்டையை காட்டி ஊரை ஏமாற்றி வந்த முன்னாள் காவலர் கைது...!

’’ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டவர்  என்பதும் தெரிந்தது. கட்டாய ஓய்வு கொடுத்த பின்னரும் பலரை மிரட்டியது தெரியவந்தது’’

குளச்சலில் ஓசியில் கார் ரிப்பேர் பார்ப்பதற்காக டுபாக்கூர் அடையாள அட்டைகளை காட்டி, மிரட்டிய முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் குளச்சல் பனவிளையை சேர்ந்தவர் ராஜன் (39). இவர் குளச்சலில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம், இவரது ஒர்க் ஷாப்புக்கு வந்த நபர், தான் குளச்சல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐ. ஆக இருப்பதாகவும், தனது காரில் டிஸ்க் சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ஊழியர்கள் சரி செய்த பின்னர், அதற்கான பணம் கொடுக்காமல் காரில் செல்ல முயன்றார்.
 
அப்போது ஒர்க் ஷாப் ஊழியர்கள் மறித்து பணம் கேட்டனர். நான் காவல் துறையில் பணியில் உள்ளேன். என்னிடமே பணம் கேட்கிறாயா? என கேட்டு ஊழியர்களை அந்த நபர் மிரட்டினார். இதனால் ஊழியர்கள், ஒர்க் ஷாப் உரிமையாளர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே 2 முறை இதே பாணியில் காரில் பழுது நீக்கி விட்டு போலீஸ் என கூறி பணம் கொடுக்காமல் சென்றவர் என்பது தெரிந்தது. உடனடியாக இது குறித்து குளச்சல் காவல் நிலையத்துக்கு ராஜன் தகவல் கொடுத்தார்.
 
இதையடுத்து குளச்சல் போலீசார் வந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை காட்டுவிளையை சேர்ந்த சேகர் (53) என்பதும், ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டவர்  என்பதும் தெரிந்தது.
 
கட்டாய ஓய்வு கொடுத்த அனுப்பிய பின்னரும், தமிழ்நாடு காவல்துறை அடையாள அட்டை, அரசு போக்குவரத்து கழக தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றுவதாக அடையாள அட்டை ஆகியவற்றை போலியாக தயாரித்து வைத்து கொண்டு அப்பகுதியில் உள்ள கடைகளில் ஓசியில் பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டியதும், பல்வேறு இடங்களில் இதே பாணியில் பணம் கொடுக்காமல் பொருட்களை வாங்கி  சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து தற்போது ராஜன் புகாரின் பேரில், முன்னாள் போலீஸ்காரரான சேகர் மீது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
 
போலி அடையாள அட்டைகளை காட்டி அப்பாவி வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
மதுராந்தகம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி மரணம்! கிராமத்தில் பெரும் சோகம்!
மதுராந்தகம் அருகே சோகம்: கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி மரணம்! கிராமத்தில் பெரும் சோகம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget