மேலும் அறிய

பெரியார் பல்கலை.,யில் கோடிக்கணக்கில் மோசடி... முன்னாள் துணை வேந்தர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

ஒவ்வொரு பருவத் தேர்விற்கும் விதிகளை மீறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்காக மட்டும் ரூ. 50 லட்சம் வரை நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் மற்றும் பணி நியமனத்தில் முறைகேடு. முன்னாள் துணைவேந்தர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் சி.ஓ.இ மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை. 

பெரியார் பல்கலை.,யில் கோடிக்கணக்கில் மோசடி... முன்னாள் துணை வேந்தர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

சேலம் கருப்பூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவு வெளியீட்டு நடவடிக்கைகளை தனியார் வசம் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் துணைவேந்தர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மீது விஜிலென்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து, இவரது மனைவி விஜயலட்சுமி பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு விவகாரத்தை தனியாருக்கு வழங்கி முறைகேடு செய்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையில் விஜயலட்சுமி புகார் அளித்தார். இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை , பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியீட்டு நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்தின் வசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விடைத்தாள் ரூ.3 முதல் ரூ.5.25 வரை கணக்கு காட்டி நிதிக்குழு ஒப்புதல் பெறாமல் மொத்தமாக ரூ. 3.26 கோடி தனியார் நிறுவனத்திற்கு பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது. ஆனால், ரகசியம் காக்கப்பட வேண்டிய தேர்வு முடிவு வெளியிடும் பொறுப்பை எந்தவித விதிமுறையும் பின்பற்றாமல் தனியார் வசம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழகத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். பல்கலைக்கழக துணை வேந்தருக்கு ரூ. 10 லட்சம் வரை மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு பருவத் தேர்விற்கும் விதிகளை மீறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்காக மட்டும் ரூ. 50 லட்சம் வரை நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல வகைகளில், தற்போதைய துணை வேந்தர் சுவாமிநாதன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லீலா மற்றும் பதிவாளர் அங்கு முத்து ஆகியோர் ஆதாயம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 5 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக இணைப்பு அனுமதி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவித வசதியும் இல்லாத 3 கல்லூரிகளுக்கு விதிகளை மீறி புதிய பாடப்பிரிவுகள் நடத்த அனுமதி வழங்கிய குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பெரியார் பல்கலை.,யில் கோடிக்கணக்கில் மோசடி... முன்னாள் துணை வேந்தர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

இதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலகட்டத்தில் பதிவாளராக இருந்த அங்கமுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் தகுதியற்றவர்கள் பணி நியமனம், தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அங்கு முத்துவின் மனைவி விஜயலட்சுமி சென்னையிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 154 பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களில் முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் உரிய தகுதி இல்லாததும் தெரியவந்தது. அதேசமயம், 46 நியமனங்களுக்கான தேர்வுக் குழுவில் பதிவேடுகளும் , மாயமாக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 47 ஆசிரியர் அல்லா பணியாளர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்தது, அதில் 10 பேரின் சான்றிதழ்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது.

ஆதாயம் பெற்றுக்கொண்டு, முறை கேடான பணி நியமனங்களை மேற்கொண்டதற்காக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லீலா மற்றும் பதிவாளர் அங்கமுத்து மீது கூட்டுச்சதி மோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Embed widget