மேலும் அறிய

Crime: நண்பருடன் மெரினாவுக்கு சென்ற பெண்.. ப்ளாக்மெயில் செய்த போலி போலீஸ் அதிகாரி.. சென்னையில் ஒரு பரபர சம்பவம்..

ஆசியாவின் மிக நீண்ட கடற்கரை என பெயர் பெற்ற சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

சென்னை மெரினா கடற்கரைக்கு ஆண் நண்பருடன் சென்ற திருமணமான ஒரு பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் அதிகாரியை காவல் துறையினர் கைது செய்தனர். 

ஆசியாவின் மிக நீண்ட கடற்கரை என பெயர் பெற்ற சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அருகிலேயே மத வழிபாட்டு தலங்கள், தலைவர்களின் நினைவிடங்கள் உள்ளதால் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தால் மெரினா கடற்கரையே திணறும். காதலர்கள், தம்பதியினர், குடும்பத்தினர் என அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் இடமாக உள்ள மெரினாவில் சில சமயங்களில் குற்ற சம்பவங்களும் அரங்கேறும். 

பணம் மற்றும் நகை திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களை தடுக்க நாள் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட மெரினாவில் போலீஸ் அதிகாரி என போலியாக கூறி ஒருவர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தன்னுடன் அலுவகத்தில் பணியாற்றும் ஆண் நண்பருடன் மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது அங்கு வந்த ஒருவர், போலீஸ் என கூறி அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இதனை உன் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அப்படி செய்யாமல் இருக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார். நிலைமையை சமாளிக்க அப்பெண்ணும் பணம் கொடுக்க இதுவே தொடர்கதையாகியுள்ளது. கணவருக்கு தெரியாமல் அடிக்கடி போன் செய்து பணம் கேட்கும் அந்த அதிகாரிக்கு கிட்டதட்ட ரூ.2 லட்சம் வரை அப்பெண் கொடுத்துள்ளார். 

இதுபோக மேலும் 2 லட்சம் மொத்தமாக கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அப்பெண் கூறியதுபோல சதீஷ்குமார் என்ற பெயரில் யாரும் மெரினா காவல் நிலையத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. 

உடனே சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அது மணலி எம்.எம்.டி.ஏ. மாத்தூர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்தது. போலீசார் அறிவுறுத்தல்படி அப்பெண்  தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வந்தால் பணம் தருவதாக சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பி அங்கு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில், மெரினாவில் திருமணமான பெண்கள், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஜோடிகளை அவர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து அதனை அப்பெண்களிடம் காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. 

இதில் சிலரிடம் பணமும் பெற்றுள்ளார். அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில் பல காதல் ஜோடிகளின் புகைப்படங்களும் இருந்தது.கடந்த 3 ஆண்டுகளாக இந்த மோசடியில் சதீஷ்குமார் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் காத்திருந்த பயங்கரம்!
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் பயங்கரம்!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget