மேலும் அறிய

வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த கீழப் பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயக்குமாரி. இவர் அரசு  விடுதியில் சமயலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக கீழப் பிள்ளையார்குளம் பகுதியில் வயல் வெளிகள் இருந்துள்ளது. தங்களது காலங்களை வயல்வெளிகளில் செலவு செய்து அதனை கவனித்து வந்துள்ளனர். இந்த  நிலையில் தனது நிலத்தில் ஜெயக்குமாரி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய பணம் இல்லாத நிலையிலும், குடும்பத்தின் அத்தியாவசிய செலவிற்காகவும் தனியார் நிறுவனங்களிடமும், வெளி நபர்களிடமும் 10 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த  நிலையில் கடன் சுமை அதிகரித்ததால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு வயல்வெளி பகுதியில் உள்ள குளத்தின் அருகே விஷம் அருந்திய நிலையில் வாயில் நுரை தள்ளி கிடந்துள்ளனர். இதனை அப்பகுதி வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். வாயில் நுரையுடன் இறந்த நிலையில் இருவரும் கிடந்துள்ளனர். இது குறித்து உடனடியாக மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்பகுதியில் தம்பதியர்  விஷம் அருந்தி ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அக்கிராம மக்களிடையே  மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget