மேலும் அறிய

வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த கீழப் பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயக்குமாரி. இவர் அரசு  விடுதியில் சமயலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக கீழப் பிள்ளையார்குளம் பகுதியில் வயல் வெளிகள் இருந்துள்ளது. தங்களது காலங்களை வயல்வெளிகளில் செலவு செய்து அதனை கவனித்து வந்துள்ளனர். இந்த  நிலையில் தனது நிலத்தில் ஜெயக்குமாரி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய பணம் இல்லாத நிலையிலும், குடும்பத்தின் அத்தியாவசிய செலவிற்காகவும் தனியார் நிறுவனங்களிடமும், வெளி நபர்களிடமும் 10 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த  நிலையில் கடன் சுமை அதிகரித்ததால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு வயல்வெளி பகுதியில் உள்ள குளத்தின் அருகே விஷம் அருந்திய நிலையில் வாயில் நுரை தள்ளி கிடந்துள்ளனர். இதனை அப்பகுதி வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். வாயில் நுரையுடன் இறந்த நிலையில் இருவரும் கிடந்துள்ளனர். இது குறித்து உடனடியாக மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்பகுதியில் தம்பதியர்  விஷம் அருந்தி ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அக்கிராம மக்களிடையே  மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget