மேலும் அறிய

வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த கீழப் பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயக்குமாரி. இவர் அரசு  விடுதியில் சமயலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக கீழப் பிள்ளையார்குளம் பகுதியில் வயல் வெளிகள் இருந்துள்ளது. தங்களது காலங்களை வயல்வெளிகளில் செலவு செய்து அதனை கவனித்து வந்துள்ளனர். இந்த  நிலையில் தனது நிலத்தில் ஜெயக்குமாரி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய பணம் இல்லாத நிலையிலும், குடும்பத்தின் அத்தியாவசிய செலவிற்காகவும் தனியார் நிறுவனங்களிடமும், வெளி நபர்களிடமும் 10 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த  நிலையில் கடன் சுமை அதிகரித்ததால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு வயல்வெளி பகுதியில் உள்ள குளத்தின் அருகே விஷம் அருந்திய நிலையில் வாயில் நுரை தள்ளி கிடந்துள்ளனர். இதனை அப்பகுதி வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். வாயில் நுரையுடன் இறந்த நிலையில் இருவரும் கிடந்துள்ளனர். இது குறித்து உடனடியாக மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்பகுதியில் தம்பதியர்  விஷம் அருந்தி ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அக்கிராம மக்களிடையே  மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
Modi Vs EPS: காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
IND VS ENG: கடைசி டெஸ்ட் நடக்கும் ஓவல்.. இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வரலாறு இதான் ப்ரோ
IND VS ENG: கடைசி டெஸ்ட் நடக்கும் ஓவல்.. இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வரலாறு இதான் ப்ரோ
சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்
சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
Modi Vs EPS: காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
IND VS ENG: கடைசி டெஸ்ட் நடக்கும் ஓவல்.. இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வரலாறு இதான் ப்ரோ
IND VS ENG: கடைசி டெஸ்ட் நடக்கும் ஓவல்.. இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வரலாறு இதான் ப்ரோ
சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்
சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்
Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
இன்னும் கல்யாணம் ஆகலயா? ஆடி மாதத்தில் இந்த வழிபாடுகளை செய்யுங்க.. கண்டிப்பா நடக்கும்
இன்னும் கல்யாணம் ஆகலயா? ஆடி மாதத்தில் இந்த வழிபாடுகளை செய்யுங்க.. கண்டிப்பா நடக்கும்
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
தக் லைஃப் படத்திற்கு 50 கோடி வாங்கிய சிம்பு...வெற்றிமாறன் படத்திற்கு எவ்வளவோ கேட்டார் தெரியுமா?
தக் லைஃப் படத்திற்கு 50 கோடி வாங்கிய சிம்பு...வெற்றிமாறன் படத்திற்கு எவ்வளவோ கேட்டார் தெரியுமா?
Embed widget