மேலும் அறிய

கடலூர்: பள்ளி மாணவர்களிடையே சாதி பிரச்னை! திடீரென வகுப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்!

கடலூர் அருகே வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்கியதில் 8 பேர் காயமடைந்தனர். இதனால் சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் அடுத்த வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இதில் 10-ம் வகுப்பு படிக்கும் இருவேறு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று  மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதை பார்த்த ஆசிரியர்கள் தகராறை விலக்கிவிட்டு, மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு வந்து, பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகளுடன் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.


கடலூர்: பள்ளி மாணவர்களிடையே சாதி பிரச்னை! திடீரென வகுப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்!

அதன் பேரில் பள்ளிக்கூடம் முன்பு காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அறிந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் இன்று காலை 11 மணி அளவில் சுவர் ஏறி பள்ளிக்குள் புகுந்தனர். பின்னர் வகுப்பறைக்குள் புகுந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மாணவர்கள் மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர். இந்த நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்டதை பற்றி அறிந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கூடம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி சக மாணவ-மாணவிகளும் வகுப்பை புறக்கணித்து பள்ளிக்கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


கடலூர்: பள்ளி மாணவர்களிடையே சாதி பிரச்னை! திடீரென வகுப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்!

இதையடுத்து அங்கிருந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பள்ளிக்கூடம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget