மேலும் அறிய

சிகிச்சையில் இருந்த தம்பதி... அரை கிலோ தங்கத்தோடு காரில் எஸ்கேப் ஆன டிரைவர்! புதுக்கோட்டை டூ சென்னை சம்பவம்!

புதுக்கோட்டையில் இருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நகைக்கடை உரிமையாளரின் கார், ரூ.5 லட்சம் மற்றும் அரை கிலோ தங்கத்துடன் மாயமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தை சேர்ந்தவர் அகமது இப்ராகிம் என்பவர். நாற்பத்தி நான்கு வயதாகும் இவர், அம்மாபட்டினத்தில் சுமங்கலி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் கவுசியா பேகம். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இந்த தம்பதிக்கு, இதுவரை குழந்தை இல்லை. இதனால், சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் தொழிலதிபர், மனைவியுடன் சேத்துப்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்து சிகிச்சைகள் பெற்றுள்ளார். சென்னை வருவதற்காக வெகுதூரம் ஓட்ட வேண்டும் என்பதால், காரை ஓட்ட உறவுக்காரர் முகமது பாரூக்கை கூட்டி கொண்டு வந்துள்ளார் அகமது இப்ராஹிம்.

சிகிச்சையில் இருந்த தம்பதி... அரை கிலோ தங்கத்தோடு காரில் எஸ்கேப் ஆன டிரைவர்! புதுக்கோட்டை டூ சென்னை சம்பவம்!

மருத்துவமனையில் சிகிச்சைக்கு நேரமாகும் என்பதால் எப்போதும் வெளியே இருப்பார் முகமது ஃபாரூக். அவர்கள் இருவரும் சிகிச்சை முடிந்தது வெளியே வந்தனர். வேலை முடிந்ததால் வீட்டிற்கு புறப்பட டிரைவருக்கு போன் செய்தபோது, முகமது ஃபாருக்கின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கொஞ்ச நேரம் எங்காவது போயிருப்பார் என்று காத்திருந்தனர். பின்னரும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், பக்கத்தில் எங்காவது இருக்கிறாரா என்று தேடினர். வெகு நேரமாகியும் அவர் வராததால் அதிர்ந்து போன தம்பதியினர் பரபரத்து அங்கேயே தேடி இருக்கின்றனர். பின்னர் பல இடங்களில் தேடியும் முகமது ஃபாரூக்கையும் காரையும் காணவில்லை. அகமது இப்ராஹிம் கவுசியா பேகம் அந்த காரில் ரூ. 5 லட்சம் பணமும், அரை கிலோ தங்கமும் வைத்திருந்துருக்கின்றனர். காரையும் பணத்தையும் நகையையும் பறிகொடுத்த தம்பதியினர் இதுபற்றி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் முகமது ஃபாருக்கின் மீது புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திக்கொண்டுள்ளனர்.

சிகிச்சையில் இருந்த தம்பதி... அரை கிலோ தங்கத்தோடு காரில் எஸ்கேப் ஆன டிரைவர்! புதுக்கோட்டை டூ சென்னை சம்பவம்!

இதனிடையே மாயமான கார் டிரைவர், தனது மனைவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, "நமது உறவினரிடமே இதுபோன்று நடந்துகொண்டது தவறு" என மனைவி கண்டித்தும் மனம் வருந்தியுள்ளார். உடனே அவர் காரை கொடுத்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு, "தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்தி உள்ளேன், அவர்களை வந்து எடுத்துக்கொள்ள சொல்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுபற்றி டிரைவரின் மனைவி, சென்னை காவல்நிலையத்தில் உள்ள உறவினர் இப்ராகிமை தொடர்பு கொண்டு, கார் நிற்குமிடத்தை தெரிவித்துள்ளார். அதன்பேரில், இங்கிருந்து தஞ்சாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டு, அவர்கள் உதவியுடன் காரை போலீசார் மீட்டனர். ஆனால் அதிலிருந்த பணம், நகைகள் மாயமானது தெரிய வந்தது. காரை மட்டும் விட்டு பணத்தையும் நகையையும் எடுத்து சென்ற டிரைவரின் செல்போன் சிக்னலை டிராக் செய்து, அவரை தேடி வருகின்றனர். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து அவர் மனைவியிடம் தெரிவித்தாரா என்பது பற்றியும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
Embed widget