மேலும் அறிய

“திருடுவதால் மகிழ்ச்சி கிடைக்கிறது” 15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது! அதிர்ச்சி வாக்குமூலம்

"15 ஆண்டுகளாக பேருந்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவி பகீர் மூலம் அளித்துள்ளார்"

சென்னையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 சவரன் நகை திருட்டு

சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி (50). வரலட்சுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில், தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது சீட் பிடிப்பதற்காக பெண்மணி ஒருவர் அவருக்கு உதவியதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து பேருந்தில் அவர் பயணித்துள்ளார். வரலட்சுமி தனது வீட்டிற்கு சென்று, தனது உடமைகளை பரிசோதித்த போது, தனது பையில் இருந்த மற்றொரு சிறிய பை காணாமல் போனதை பார்த்து உள்ளார். அந்த சிறிய பையில் இருந்த 5 சவரன் நகையும் காணாமல் போனதை பார்த்து, வரலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். 

கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் 

உடனடியாக வரலட்சுமி இதுகுறித்து முதலில் காஞ்சிபுரத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் நகை காணாமல் போனது குறித்து வரலட்சுமி புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு கிராமத்தின், ஊராட்சி மன்ற தலைவர் பாரதி (51) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற தலைவரான பாரதி திமுக ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். காவல்துறையினர் பாரதியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

"தலைவரான பிறகும் திருடாமல் இருக்க முடியவில்லை"

காவல்துறையில் கைதான பாரதி கொடுத்த வாக்குமூலத்தில், திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். பாரதி ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து திசை திருப்பி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பேருந்தில் ஏறியவுடன் சாதாரணமாக குழந்தைகள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு கொடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பாரதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பேருந்தில் திருடும் பணத்தை விற்று சொந்த ஊரில் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி உள்ளார் என காவல்துறையின தெரிவித்தனர்.

பாரதி ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பிறகும் திருட்டு தொழிலை விட்டுவிட படி உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் தன்னால் திருட்டுப் பழக்கத்தை விட முடியவில்லை என பாரதி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருடும்போது தனக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைப்பதாகவும் அதனால திருட்டுத் தொழிலில் பாரதி ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருட்டு தொழிலுக்கு செல்லும் போது "இனி திருடவே கூடாது" என ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால் திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் திருடி விடுவேன் என் சபதம் தோற்றுவிடும் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget