மேலும் அறிய

“திருடுவதால் மகிழ்ச்சி கிடைக்கிறது” 15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது! அதிர்ச்சி வாக்குமூலம்

"15 ஆண்டுகளாக பேருந்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவி பகீர் மூலம் அளித்துள்ளார்"

சென்னையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 சவரன் நகை திருட்டு

சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி (50). வரலட்சுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில், தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது சீட் பிடிப்பதற்காக பெண்மணி ஒருவர் அவருக்கு உதவியதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து பேருந்தில் அவர் பயணித்துள்ளார். வரலட்சுமி தனது வீட்டிற்கு சென்று, தனது உடமைகளை பரிசோதித்த போது, தனது பையில் இருந்த மற்றொரு சிறிய பை காணாமல் போனதை பார்த்து உள்ளார். அந்த சிறிய பையில் இருந்த 5 சவரன் நகையும் காணாமல் போனதை பார்த்து, வரலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். 

கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் 

உடனடியாக வரலட்சுமி இதுகுறித்து முதலில் காஞ்சிபுரத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் நகை காணாமல் போனது குறித்து வரலட்சுமி புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு கிராமத்தின், ஊராட்சி மன்ற தலைவர் பாரதி (51) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற தலைவரான பாரதி திமுக ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். காவல்துறையினர் பாரதியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

"தலைவரான பிறகும் திருடாமல் இருக்க முடியவில்லை"

காவல்துறையில் கைதான பாரதி கொடுத்த வாக்குமூலத்தில், திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். பாரதி ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து திசை திருப்பி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பேருந்தில் ஏறியவுடன் சாதாரணமாக குழந்தைகள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு கொடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பாரதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பேருந்தில் திருடும் பணத்தை விற்று சொந்த ஊரில் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி உள்ளார் என காவல்துறையின தெரிவித்தனர்.

பாரதி ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பிறகும் திருட்டு தொழிலை விட்டுவிட படி உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் தன்னால் திருட்டுப் பழக்கத்தை விட முடியவில்லை என பாரதி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருடும்போது தனக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைப்பதாகவும் அதனால திருட்டுத் தொழிலில் பாரதி ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருட்டு தொழிலுக்கு செல்லும் போது "இனி திருடவே கூடாது" என ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால் திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் திருடி விடுவேன் என் சபதம் தோற்றுவிடும் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget