மேலும் அறிய

“திருடுவதால் மகிழ்ச்சி கிடைக்கிறது” 15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது! அதிர்ச்சி வாக்குமூலம்

"15 ஆண்டுகளாக பேருந்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவி பகீர் மூலம் அளித்துள்ளார்"

சென்னையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 சவரன் நகை திருட்டு

சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி (50). வரலட்சுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில், தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது சீட் பிடிப்பதற்காக பெண்மணி ஒருவர் அவருக்கு உதவியதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து பேருந்தில் அவர் பயணித்துள்ளார். வரலட்சுமி தனது வீட்டிற்கு சென்று, தனது உடமைகளை பரிசோதித்த போது, தனது பையில் இருந்த மற்றொரு சிறிய பை காணாமல் போனதை பார்த்து உள்ளார். அந்த சிறிய பையில் இருந்த 5 சவரன் நகையும் காணாமல் போனதை பார்த்து, வரலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். 

கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் 

உடனடியாக வரலட்சுமி இதுகுறித்து முதலில் காஞ்சிபுரத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் நகை காணாமல் போனது குறித்து வரலட்சுமி புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு கிராமத்தின், ஊராட்சி மன்ற தலைவர் பாரதி (51) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற தலைவரான பாரதி திமுக ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். காவல்துறையினர் பாரதியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

"தலைவரான பிறகும் திருடாமல் இருக்க முடியவில்லை"

காவல்துறையில் கைதான பாரதி கொடுத்த வாக்குமூலத்தில், திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். பாரதி ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து திசை திருப்பி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பேருந்தில் ஏறியவுடன் சாதாரணமாக குழந்தைகள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு கொடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பாரதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பேருந்தில் திருடும் பணத்தை விற்று சொந்த ஊரில் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி உள்ளார் என காவல்துறையின தெரிவித்தனர்.

பாரதி ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பிறகும் திருட்டு தொழிலை விட்டுவிட படி உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் தன்னால் திருட்டுப் பழக்கத்தை விட முடியவில்லை என பாரதி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருடும்போது தனக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைப்பதாகவும் அதனால திருட்டுத் தொழிலில் பாரதி ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருட்டு தொழிலுக்கு செல்லும் போது "இனி திருடவே கூடாது" என ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால் திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் திருடி விடுவேன் என் சபதம் தோற்றுவிடும் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது

தலைப்பு செய்திகள்

பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Embed widget