மேலும் அறிய

சொத்துக்காக தந்தை, தங்கை வெட்டிக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்

ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் தங்கையைv வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பொட்டு காரம் பட்டி சேர்ந்தவர் வரதன்(80). விவசாயியான இவரது மனைவி கடந்த  30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது மகன்கள் லவகிருஷ்ணன் (57) கணேசன் (47) கிருஷ்ணன் மகள்கள் மனவள்ளி (55) மங்கம்மாள் (45). இதில் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 

வரதனுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மகன்கள் 15 சென்ட் அளவில் நிலம் எடுத்துக்கொண்டு வீடு கட்டி வசித்து வருகின்றனர். மனவள்ளி கணவன் முருகேசன் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து விட்டார். இவருக்கு மகன் மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனவள்ளி மட்டும் தனியாக வசித்து வந்தார். மேலும் அப்பா சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று அப்பா நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். மூத்த மகன் லவகிருஷ்ணன் விவசாயம் மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் இருவரும் இறந்துவிட்டனர். இவரது மகள் கல்லாவியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனவள்ளிக்கும் தனக்கும் வாரிசு படி அப்பா சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டு 2015 இல் ஊத்தங்கரை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனால் அதிர்ச்சியான வரதன் மகன் லவகிருஷ்ணனிடம் சொத்தை பிரிக்கக்கூடாது நீதான் வழக்கை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். லவகிருஷ்ணனும் வக்கீலை சந்தித்து பேசி வழக்கை நடத்தி வந்துள்ளார்.

பலகட்ட பேச்சு வார்த்தையும் நடந்து வந்துள்ளது. கடந்த 06.06 24 மனவள்ளி தொடர்ந்து வழக்கு தள்ளுபடி ஆனது.  இதை அடுத்து லவகிருஷ்ணன் இந்த வழக்குக்காக பல லட்சம் செலவு செய்துள்ளேன் சொத்தை பிரித்து எனக்கு தர வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்து கேட்டு யார் வழக்கு போட்டாரோ அவருக்கே சொத்தை கொடுப்பேன் என வரதன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அப்படி செய்தால் கொல்லாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்.

சொத்துக்காக தந்தை, தங்கை வெட்டிக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்

விஏஓ அலுவலகம் முன்பு தந்தை தங்கையை வெட்டிய நபர்

இந்நிலையில் நேற்று வரதன் தன்னுடைய சொத்து தொடர்பாக அனுபவச்சான்று வாங்குவதற்காக மகள் மனவள்ளியுடன் மூன்றாம் பட்டி விஏஓ அலுவலகத்திற்கு சென்றார். இதனிடையே இதனை அறிந்தால் ராதா கிருஷ்ணன் அங்கு அறிவாளுடன் சென்றார். அங்கும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தந்தை வரதனையும் தங்கை மனவள்ளியையும் சராமாரியாக வெட்டினார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ரத்த வெள்ளத்தில் சரிந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். அதனை கண்டு அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை விசாரணை

தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்பி தங்கதுரை டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்திரகுமார் விஏஓ கவியரசு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த வரதன் மனவள்ளி ஆகியோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மூன்றாம் பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவியரசி சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து பகுதியில் இருந்த லவகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தந்தை தங்கையை கொன்றது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பட்டப்பகலில் தாய் தந்தை தங்கையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget