மேலும் அறிய

சொத்துக்காக தந்தை, தங்கை வெட்டிக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்

ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் தங்கையைv வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பொட்டு காரம் பட்டி சேர்ந்தவர் வரதன்(80). விவசாயியான இவரது மனைவி கடந்த  30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது மகன்கள் லவகிருஷ்ணன் (57) கணேசன் (47) கிருஷ்ணன் மகள்கள் மனவள்ளி (55) மங்கம்மாள் (45). இதில் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 

வரதனுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மகன்கள் 15 சென்ட் அளவில் நிலம் எடுத்துக்கொண்டு வீடு கட்டி வசித்து வருகின்றனர். மனவள்ளி கணவன் முருகேசன் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து விட்டார். இவருக்கு மகன் மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனவள்ளி மட்டும் தனியாக வசித்து வந்தார். மேலும் அப்பா சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று அப்பா நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். மூத்த மகன் லவகிருஷ்ணன் விவசாயம் மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் இருவரும் இறந்துவிட்டனர். இவரது மகள் கல்லாவியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனவள்ளிக்கும் தனக்கும் வாரிசு படி அப்பா சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டு 2015 இல் ஊத்தங்கரை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனால் அதிர்ச்சியான வரதன் மகன் லவகிருஷ்ணனிடம் சொத்தை பிரிக்கக்கூடாது நீதான் வழக்கை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். லவகிருஷ்ணனும் வக்கீலை சந்தித்து பேசி வழக்கை நடத்தி வந்துள்ளார்.

பலகட்ட பேச்சு வார்த்தையும் நடந்து வந்துள்ளது. கடந்த 06.06 24 மனவள்ளி தொடர்ந்து வழக்கு தள்ளுபடி ஆனது.  இதை அடுத்து லவகிருஷ்ணன் இந்த வழக்குக்காக பல லட்சம் செலவு செய்துள்ளேன் சொத்தை பிரித்து எனக்கு தர வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்து கேட்டு யார் வழக்கு போட்டாரோ அவருக்கே சொத்தை கொடுப்பேன் என வரதன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அப்படி செய்தால் கொல்லாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்.

சொத்துக்காக தந்தை, தங்கை வெட்டிக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்

விஏஓ அலுவலகம் முன்பு தந்தை தங்கையை வெட்டிய நபர்

இந்நிலையில் நேற்று வரதன் தன்னுடைய சொத்து தொடர்பாக அனுபவச்சான்று வாங்குவதற்காக மகள் மனவள்ளியுடன் மூன்றாம் பட்டி விஏஓ அலுவலகத்திற்கு சென்றார். இதனிடையே இதனை அறிந்தால் ராதா கிருஷ்ணன் அங்கு அறிவாளுடன் சென்றார். அங்கும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தந்தை வரதனையும் தங்கை மனவள்ளியையும் சராமாரியாக வெட்டினார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ரத்த வெள்ளத்தில் சரிந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். அதனை கண்டு அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை விசாரணை

தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்பி தங்கதுரை டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்திரகுமார் விஏஓ கவியரசு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த வரதன் மனவள்ளி ஆகியோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மூன்றாம் பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவியரசி சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து பகுதியில் இருந்த லவகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தந்தை தங்கையை கொன்றது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பட்டப்பகலில் தாய் தந்தை தங்கையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget