மேலும் அறிய

”எப்புர்றா? டூபாக்கூர் அன்னப்பூரணி சாமியாரை நம்பும் பக்தர்கள்” ஆயிரம் பெரியார் வந்தாலும்..!

தானே கோயில், தன் உருவமே தெய்வம் என்று சொல்லி 420 வேலை பார்ப்பவர்களுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் இறைநம்பிக்கைக் கொண்டவர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.

”சாமி இருக்குன்னு சொல்றவங்கள நம்பு, இல்லன்னு சொல்றவங்கள கூட நம்பு. ஆனால், நான் தான் சாமின்னு சொல்றான் பார், அவன நம்பவே நம்பாத. அவன்தான் ஒன்னா நம்பர் டுபாக்கூர்” என்ற பிரபல வசனத்திற்கு ஏற்றார்போல், தன்னையே சாமியாக, கடவுளாக, தெய்வீக உருவாக மக்களை நினைக்க வைத்து, பிழைத்து வரும் அன்னப்பூரணி அரசு அம்மா இப்போது 3வதாக திருமணம் செய்துக்கொண்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

சாமியார் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாதா?

சாமியார் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாதா ? என்றால் செய்துக்கொள்ளலாம். 3வதாக திருமணம் செய்தால் தவறா? என்றால் அதுவும் இல்லை, அவர் விரும்பினால் இன்னும் 30 முறை கூட திருமணம் செய்துக்கொள்ளலாம் அது அவரது விருப்பம். அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.  

ஆனால், தன்னை சாமி என்று கூறிக்கொண்டு மக்களை பாத சேவை செய்ய சொல்லி, பால் குடம் எடுக்க வைத்து, ஆன்மீகம் என்ற பெயரை பயன்படுத்தி, அவர்களை பணைய கைதி மாதிரி நடத்தி வருவது மட்டுமில்லாமல், இப்போது தான் 3வதாக திருமணம் செய்துக்கொண்டிருக்கும் ரோகித் என்பவரையும் வைத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்க திட்டம் தீட்டியிருக்கிறார் அன்னப்பூரணி அரசு அம்மா என்று பரவும் தகவலால் அவரது பக்தர்களே அதிர்ச்சியடைந்து அவர் டுபாக்கூர் சாமியாரா ? என்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

வள்ளலார் பிறந்த மண்ணில் வளரும் விஷப்பாம்புகள்

’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற திருவருட்பிரகாச வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகள் தோன்றிய இதே தமிழ் மண்ணில்தான், அன்னப்பூரணி அரசு அம்மா போன்ற ஒன்னா நம்பர் டுபாக்கூர் சாமியர்களும் தோன்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றும் வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, மூக்கில் இருந்து தங்கம் எடுப்பது, தலையில் இருந்து தண்ணீர் வரவைப்பது என்று சித்து வேலைகளை செய்யும் இவர் போன்ற சில்லறைகளையெல்லாம் இன்னும் அப்பாவி பொதுமக்கள் நம்பி ஏமாறுவதை தடுக்க, தமிழ்நாட்டில் இன்னொரு புதிய இயக்கமே தோன்றவேண்டும் என பேசும் அளவிற்கு இவர்களது நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

ஆயிரம் பெரியார் வந்தாலும்… பக்தர்கள் குமுறல்

இன்று தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்றால் அதற்கு பெரியார் என்ற பேராயுதம் ஒரு மிகப்பெரிய காரணம். ஆனால், “இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது டா” என்று நகைச்சுவையாக விவேக் சொல்லும் வசனத்தைப்போலதான், பல இடங்களில் மக்கள் இவர் போன்ற ஏமாற்று பேர்வழிகளை நம்பி, மோசம் போகின்றார்கள். இதில் படித்தவர்களும் விதிவிலக்க, படிக்காத பாமரர்களை காட்டிலும் படித்த முட்டாள்கள்தான் இவர்களுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர் என தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்களே முகம் சுளிக்கும் கதையாக மாறியிருக்கிறது அன்னப்பூரணியின் அலப்பறைகள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

பகுத்தறிவு, சமூக நீதி கொள்கையுடன் ஆட்சி செய்து வருவதாக தொடர்ந்து கூறி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்மீகம், பக்தி என்ற பெயர்களை வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி, தங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளும் அன்னப்பூரணி அம்மா போன்ற ஒன்னா நம்பர் டுபாக்கூர் சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், உண்மையான, ஆர்ப்பாட்டமில்லாத, இறை நோக்குடன் இருக்கும் ஆன்மீகவாதிகளுக்கான மரியாதை கிடைக்கும் என இறைநம்பிக்கை கொண்டவர்கள் பேசிவருகின்றார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை என்ற முக்கியமான துறை மூலம் கோயில்களை நிர்வகித்து வரும் அரசு, தானே கோயில், தன் உருவமே தெய்வம் என்று சொல்லி 420 வேலை பார்ப்பவர்களுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் இறைநம்பிக்கைக் கொண்டவர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Embed widget