மேலும் அறிய

Delhi | நிஜ துப்பாக்கியில் விளையாட்டு.. நெஞ்சில் பாய்ந்த குண்டு.. சுருண்டு விழுந்த 11 வயது சிறுவன்!

Delhi: விசாரணை நடத்தியபோது தாங்கள் துப்பாக்கியை வைத்து விளையாடிக்  கொண்டிருந்தோம் என சிறுமி கூறியுள்ளார்.


வீட்டில் இருந்த நிஜ துப்பாக்கியை வைத்து விளையாடியபோது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக் கூடிய ஒன்று. குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை பெற்றோர்களே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அஜாக்கிரதையும், சூழ்நிலையும் சில நேரம் பெற்றோர்களுக்கு மறக்க முடியாத வலியை கொடுத்துவிடுகிறது. அப்படியான விபத்துகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் ஒரு சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வீட்டில் இருந்த நிஜ துப்பாக்கியை வைத்து விளையாடியபோது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். டெல்லியின் நூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டுள்ளது. 

கோயிலில் உள்ள குளிக்கும் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் இருந்ததால் பெண்கள் அதிர்ச்சி


Delhi | நிஜ துப்பாக்கியில் விளையாட்டு.. நெஞ்சில் பாய்ந்த குண்டு.. சுருண்டு விழுந்த 11 வயது சிறுவன்!

அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது அவர்களின் மூத்த மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாதபோது விபத்து நடந்ததால் உடனடியாக அக்கம் பக்கத்தினரே மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால்  ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையின்படி சம்பவம் நடந்த போது பெற்றோர் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை வைத்து 11 வயது சிறுவனும், அவனது தங்கையுமான 9 வயது சிறுமியுன் விளையாடியுள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக கைத்துப்பாக்கி வெடித்து சிறுவன் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் அருகில் உள்ள கட்டிலில் சாய்ந்துவிட்டான். சத்தம் கேட்டு ஓடு வந்த பக்கத்து வீட்டினர் ரத்த வெள்ளத்தில் சிறுவன் கிடப்பதையும், அருகில் துப்பாக்கி இருப்பதையும் பார்த்துள்ளனர். இது தொடர்பாக அருகில் நின்ற தங்கையிடம் விசாரணை நடத்தியபோது தாங்கள் துப்பாக்கியை வைத்து விளையாடிக்  கொண்டிருந்தோம் என சிறுமி கூறியுள்ளார்.

விபத்து வழக்காக இதனை தற்போது பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை வளர்பில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் அறிவுரையும் வழங்கியுள்ளனர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Ration Shop : மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Embed widget