மேலும் அறிய

புஷ்பா பட பாணியில் கடத்தல்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் 72 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ 30 லட்சம் மதிப்புள்ள குட்கா, மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புஷ்பா பட பாணியில் சம்பவம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குட்கா பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

டெம்போவில் ரகசிய அறை அமைத்து  குட்கா மூட்டைகள் கடத்தல்

தனிப்படை இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் மணிகண்டன், ஸ்ரீதர், ரமணி மற்றும் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலைநகர் அருகே உள்ள கடவாச்சேரி பாலத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டபோது 2 டெம்போக்களில் மூட்டைகள் மாற்றப்பட்டு கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

பின்னர் அங்கு சென்று விசாரித்தபோது மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் மாற்றப்பட்டது தெரிய வந்தது. பெங்களூரில் இருந்து டெம்போவில் ரகசிய அறை அமைத்து அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி கொண்டு வந்து சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (43), தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(28), சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ்( 32), எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35), பிரேம்குமார்(22) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல்

பின்னர் இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், இவர்களிடமிருந்து ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ 30 லட்சம் ஆகும். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் வாகனங்களையும் நேரில் வந்து பார்வையிட்ட சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி இங்கு கொண்டு வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் குட்காவுக்கு தடை இல்லை. அதனால் அங்கிருந்து இங்கு கடத்தி வந்து சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம், வடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கிறார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்து கடந்த ஒரு மாதமாக அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தபோது, குட்கா கடத்தியவர்கள் மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினி லாரிகளில் ரகசிய அறைகள் அமைத்து இதை கடத்தி வந்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட வேண்டி இருக்கிறது. தற்போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் என டிஎஸ்பி கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget