மேலும் அறிய

புஷ்பா பட பாணியில் கடத்தல்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் 72 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ 30 லட்சம் மதிப்புள்ள குட்கா, மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புஷ்பா பட பாணியில் சம்பவம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குட்கா பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

டெம்போவில் ரகசிய அறை அமைத்து  குட்கா மூட்டைகள் கடத்தல்

தனிப்படை இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் மணிகண்டன், ஸ்ரீதர், ரமணி மற்றும் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலைநகர் அருகே உள்ள கடவாச்சேரி பாலத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டபோது 2 டெம்போக்களில் மூட்டைகள் மாற்றப்பட்டு கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

பின்னர் அங்கு சென்று விசாரித்தபோது மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் மாற்றப்பட்டது தெரிய வந்தது. பெங்களூரில் இருந்து டெம்போவில் ரகசிய அறை அமைத்து அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி கொண்டு வந்து சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (43), தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(28), சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ்( 32), எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35), பிரேம்குமார்(22) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல்

பின்னர் இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், இவர்களிடமிருந்து ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ 30 லட்சம் ஆகும். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் வாகனங்களையும் நேரில் வந்து பார்வையிட்ட சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி இங்கு கொண்டு வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் குட்காவுக்கு தடை இல்லை. அதனால் அங்கிருந்து இங்கு கடத்தி வந்து சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம், வடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கிறார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்து கடந்த ஒரு மாதமாக அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தபோது, குட்கா கடத்தியவர்கள் மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினி லாரிகளில் ரகசிய அறைகள் அமைத்து இதை கடத்தி வந்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட வேண்டி இருக்கிறது. தற்போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் என டிஎஸ்பி கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget