மேலும் அறிய

புஷ்பா பட பாணியில் கடத்தல்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் 72 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ 30 லட்சம் மதிப்புள்ள குட்கா, மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புஷ்பா பட பாணியில் சம்பவம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குட்கா பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

டெம்போவில் ரகசிய அறை அமைத்து  குட்கா மூட்டைகள் கடத்தல்

தனிப்படை இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் மணிகண்டன், ஸ்ரீதர், ரமணி மற்றும் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலைநகர் அருகே உள்ள கடவாச்சேரி பாலத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டபோது 2 டெம்போக்களில் மூட்டைகள் மாற்றப்பட்டு கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

பின்னர் அங்கு சென்று விசாரித்தபோது மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் மாற்றப்பட்டது தெரிய வந்தது. பெங்களூரில் இருந்து டெம்போவில் ரகசிய அறை அமைத்து அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி கொண்டு வந்து சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (43), தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(28), சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ்( 32), எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35), பிரேம்குமார்(22) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல்

பின்னர் இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், இவர்களிடமிருந்து ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ 30 லட்சம் ஆகும். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் வாகனங்களையும் நேரில் வந்து பார்வையிட்ட சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி இங்கு கொண்டு வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் குட்காவுக்கு தடை இல்லை. அதனால் அங்கிருந்து இங்கு கடத்தி வந்து சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம், வடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கிறார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்து கடந்த ஒரு மாதமாக அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தபோது, குட்கா கடத்தியவர்கள் மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினி லாரிகளில் ரகசிய அறைகள் அமைத்து இதை கடத்தி வந்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட வேண்டி இருக்கிறது. தற்போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் என டிஎஸ்பி கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget