மேலும் அறிய

Crime: மகளிர் குழுக்கு சொந்தமான ரூபாய் 12 லட்சத்தை மோசடி செய்த இளைஞர் - உள்ளே தள்ளிய போலீஸ்

திருவண்ணாமலை, ஜமுனாமரத்தூரில் மகளிர்குழுவின் காசோலையை பயண்படுத்தி 12 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது (45) இவர் விவசாயி அவரது மனைவி சாந்தி வயது (40). இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த 12 மகளிர் குழுக்கள் இதில் செயல்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ஜமுனாமரத்தூரில் உள்ள ஜம்படி கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் வயது (32) என்பவர் கள அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த கூட்டமைப்பிற்கான சேமிப்பு கணக்கு ஜமுனாமரத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருக்கிறது. இந்த வங்கி கணக்கில் இருந்து குழுக்களுக்கு கடண் உதவி செய்ய பணம் எடுக்க வேண்டும் என்றால் தலைவியான சாந்தி, பொருளாளரான தீபா, முதன்மை நிர்வாகியான அருள்பத்திநாதன் ஆகியோர் குழு கூட்டமைப்பால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் சென்று பணத்தை பெற்று வருவார்கள். 

 


Crime: மகளிர் குழுக்கு சொந்தமான ரூபாய் 12 லட்சத்தை மோசடி செய்த இளைஞர் - உள்ளே தள்ளிய போலீஸ்

பணம் ஒப்படைக்கவில்லை:

இந்நிலையில் கூட்டமைப்பில் உள்ள 12 மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று இணைந்து விவசாய பொருட்களை வாங்குவது சம்பந்தமாக கூட்டத்தை கூட்டி அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குரிய பணத்திற்கு காசோலையில் அவர்கள் 3 நபர்களும் கையெழுத்திட்டு அந்த காசோலையை கள அலுவலர் பிரவீன்குமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் பிரவீன்குமார் கூட்டமைப்பின் வங்கி காசோலையில் தலைவி உள்ளிட்ட நிர்வாகிகளின் கையெழுத்தை போட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பிரவீன் குமார் ரூபாய் 12 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை பிரவீன் குமார் குழுவினர்களிடம் எடுத்து சென்று கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பிரவீன் குமார் பணத்தை எடுத்துக்கொண்டு வருவார் என நம்பி இருந்த அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இது குறித்து தலைவி சாந்தி பிரவீன் குமாரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பிரவீன் குமார் அவரிடம் பணம் நான் எடுக்கவில்லை என கூறியுள்ளார். அதனையடுத்து பிரவீன் குமார் பணத்தை எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

 


Crime: மகளிர் குழுக்கு சொந்தமான ரூபாய் 12 லட்சத்தை மோசடி செய்த இளைஞர் - உள்ளே தள்ளிய போலீஸ்

12 லட்சம் மோசடி:

உடனடியாக இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவி சாந்தி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி மேற்கொண்டனர். போலியாக காசோலையில் கையெழுத்திட்டு ரூபாய் 12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரவீன்குமாரை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget