மேலும் அறிய

Crime: விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பணியாளர்.. கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்..ஷாக்!

மும்பையில் வீட்டில் தனியாக இருந்த விமான பணிப்பெண் வேலை செய்யும் இளம்பெண்ணை, பணியாளர் கழுத்தை அறுத்து கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மும்பையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை, பணியாளர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்:

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூபால் ஆக்ரே (25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் விமான பணிப்பெண்ணாக பயிற்சி பெற மும்பைக்கு வந்திருந்தார். அங்கு அந்தேரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கை மற்றும் அவரது ஆண் நண்பருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் ரூபால் ஆக்ரே மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 3) இளம்பெண் ரூபால் ஆக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் கிடந்துள்ளார். 

அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தபோது பதில் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகத்தில் இளம்பெண்ணின் நண்பர்களுக்கு  தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கூறினர். இதனை அடுத்து, அவரது நண்பர்கள் அந்தேரி நகரில் இருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

விசாரணையில் அம்பலம்:

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  வீடு இருக்கும் வளாக பகுதியில் தூய்மை பணியாளராக இருந்த விக்ரம் அத்வால் (40) என்பவரை கைது செய்தனர். அவரிடனும், அவரது மனைவியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த  நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, "தூய்மை பணியாளர் விக்ரம் அத்வால் காலை 11 மணியளவில் ரூபேல்லின் வீட்டிற்கு குப்பை எடுப்பதற்காக சென்றிருக்கிறார். வீட்டில் ரூபேல் மட்டும் தனியாக இருப்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டு உள்ளே பாத்ரூம் பைப்பில் கசிவு இருப்பதாகக் கூறி அதைப் பார்க்கும்படி கூறியிருக்கிறார்” 

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி:

இதனால், ரூபேல் பாத்ரூம்மிற்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து விக்ரம் அத்வாலும் சென்றிருக்கிறார். பாத்ரூம்குள், ரூபோல் சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார் விக்ரம் அத்வால். ஆனால், அதனை தடுக்க ரூபேல் முயற்சித்திருக்கிறார். இதனை அடுத்து, ரூபேல் விக்ரமுடன் போராடியபோது விக்ரமின் முகம் மற்றும் தலையில் அவர் தாக்கியுள்ளார். அப்போது, விக்ரம் ரூபேலின் தலைமுடியை பின்புறமாக இழுத்து, கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார் விக்ரம் அகர்வால். பின்பு அவரது முகத்தில் இருந்த காயம், சட்டையில் இருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் மனைவி முகத்தில் இருக்கும் காயம் பற்றி கேட்டதற்கு கீழே விழுந்துவிட்டதாக விக்ரம் தெரிவித்திருக்கிறார்” என்று போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, கைதான விக்ரம் அகர்வாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செப்டம்பர் 8ஆம் வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
Embed widget