மேலும் அறிய

கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்; ஒரே நாளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள்

மாயனூர் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சினிமா நடன கலைஞரை சடலத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் எரியூட்டிய குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது. 

கரூரில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் டவுன் போலீஸ் எஸ்ஐ, பானுமதி உள்ளிட்ட போலீசார் நேற்று முன் தினம் ஐந்து சாலை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, லாட்டரி சீட்டுகளை விற்றதாக, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த ரூபன், கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த முருகேசன், ஆகிய இருவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். 

 

 


கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்; ஒரே நாளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள்

நடன கலைஞர் தற்கொலை. 

மாயனூர் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சினிமா நடன கலைஞரை சடலத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் எரியூட்டிய குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாயனூர் அருகே செங்கல் சமத்துவபரத்தை சேர்ந்த ராஜலிங்கம் மகன் கதிரேசன், சினிமா நடன கலைஞராக இருந்து வந்தார். கடந்த நான்காம் தேதி இரவு, தந்தையின் மளிகை கடையில், கதிரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, போலீசில் புகார் அளிக்காமல் சடலத்தை அவரது குடும்பத்தினர் எரியூட்டிவிட்டனர். இந்நிலையில் சேங்கல் வி.ஏ.ஓ சிவக்குமார் இது குறித்து மாயனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் கதிரேசனின் தந்தை ராஜலிங்கம், தாய் ரேணுகாதேவி அண்ணன் கார்த்திகேயன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

 


கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்; ஒரே நாளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள்

நெடுஞ்சாலை மரத்தை வெட்டியவர் மீது புகார். 

க. பரமத்தி அருகே மரங்களை வெட்டிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். க. பரமத்தி அருகே காரு உடையாம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இரண்டு மரங்களை வெட்டியதாக, கரூர், கஸ்பா நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது தேசிய நெடுஞ்சாலை துறை துணை பொறியாளர் பாலசுப்ரமணியம் கா. பரமத்தி போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் கார்த்திக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 


கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்; ஒரே நாளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள்

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு. 

அரவக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா, இவர், நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ,17 வயது சிறுமியை கடந்த ஆறாம் தேதி, சாலப்பாளையம் பட்டாளம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அரவக்குறிச்சி குழந்தைகள் நல அலுவலர் பூரணம் கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது கரூர் நகர  மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  

 


கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்; ஒரே நாளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. 

கரூரில் கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் சின்ன ஆண்டான் கோவில் திருப்பதி லே-அவுட் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் தினேஷ், கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தினேஷின் மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget