மேலும் அறிய

Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

வந்தவாசியில் கணவன் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் சகோதரன் தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு; விபத்து எனக்கூறி நாடகமாடிய இருவரையும் தட்டி தூக்கிய காவல்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ் வயது (35). மாற்றுத்திறனாளியான டெல்லி கணேஷ் அதே பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரில் வேலைச் செய்துவந்துள்ளார். இவருடைய  மனைவி சுகன்யா வயது (31). டெல்லி கணேஷ் தினமும் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து  மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். காரணம், மனைவியின் நடத்தைமீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, வெளியில் சென்றுவிட்டு வந்த மனைவி சுகன்யாவை சந்தேகப்பட்டு டெல்லி கணேஷ் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, கீழ்நமண்டி கிராமத்தில் வசிக்கும் தனது தம்பி நவீன்குமாருக்கு வயது (28) தொலைபேசி  மூலம் தெரிவித்துள்ளார்  சுகன்யா. நவீன்குமாரும் புறப்பட்டு வந்து அக்காவின்  கணவரான டெல்லி கணேஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையே மோதலில் ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது டெல்லி கணேஷ் பின்பக்க மண்டையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.


Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

 

கணவனை அடித்து கொன்ற மனைவி 

உடனடியாக என்னசெய்வது என்று தெரியாமல் உடனடியாக சுகன்யாவும் அவருடைய சகோதரர்  யாருக்கும் தெரியாமல், டெல்லி கணேஷ் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவர்களிடம், `தனது கணவர் இருசக்கர வாகனதில்  இருந்து கீழே விழுந்துவிட்டதாக’சுகன்யா நாடகமாடியுள்ளார். மருத்துவர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். ஆனாலும், கடந்த மாதம் 22-ம் தேதி டெல்லி கணேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து, தெள்ளார் காவல் நிலைய காவல்துறையினர்  விபத்து கோணத்திலேயே வழக்கு பதிந்து சரிவர புலன் விசாரணை மேற்கொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இதனால், சுகன்யா இயல்பாக இருந்திருக்கிறார். கணவரை இழந்துவிட்டோம் என்ற வலியே, வேதனையோ அவரிடம் காணப்படவில்லை. 


Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

 

போலீசார் விசாரணையில் சிக்கிய மனைவி கைது 

ஏற்கெனவே, மனைவியின் நடத்தை சரியில்லை என்று டெல்லி கணேஷ் சண்டைப் போட்டு வந்ததற்கும், திடீரென டெல்லி கணேஷ் இறந்ததற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதாகவும் வீட்டின் அக்கம்பக்கத்தினரும், கிராமத்தினரும் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லி கணேஷின் தாய் தமிழ்ச்செல்வி, `தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி மருமகள் சுகன்யா, அவரது தம்பி நவீன்குமாரை விசாரியுங்கள்’ என தெள்ளார் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்திருக்கிறார். அதன்பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையை சரியாகப் படித்து பார்த்து, மனைவி சுகன்யாவையும், அவரது தம்பி நவீன்குமாரையும் பிடித்து காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது, கட்டையால் தாக்கி கணவரை கொலைச் செய்ததை சுகன்யா ஒப்புக்கொண்டார். தானும் உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி நவீன்குமாரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்றைய தினம் இருவரையும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். மேலும்  இருவரையும் வேலூர் சிறையில்  அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Embed widget