மேலும் அறிய

Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

வந்தவாசியில் கணவன் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் சகோதரன் தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு; விபத்து எனக்கூறி நாடகமாடிய இருவரையும் தட்டி தூக்கிய காவல்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ் வயது (35). மாற்றுத்திறனாளியான டெல்லி கணேஷ் அதே பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரில் வேலைச் செய்துவந்துள்ளார். இவருடைய  மனைவி சுகன்யா வயது (31). டெல்லி கணேஷ் தினமும் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து  மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். காரணம், மனைவியின் நடத்தைமீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, வெளியில் சென்றுவிட்டு வந்த மனைவி சுகன்யாவை சந்தேகப்பட்டு டெல்லி கணேஷ் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, கீழ்நமண்டி கிராமத்தில் வசிக்கும் தனது தம்பி நவீன்குமாருக்கு வயது (28) தொலைபேசி  மூலம் தெரிவித்துள்ளார்  சுகன்யா. நவீன்குமாரும் புறப்பட்டு வந்து அக்காவின்  கணவரான டெல்லி கணேஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையே மோதலில் ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது டெல்லி கணேஷ் பின்பக்க மண்டையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.


Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

 

கணவனை அடித்து கொன்ற மனைவி 

உடனடியாக என்னசெய்வது என்று தெரியாமல் உடனடியாக சுகன்யாவும் அவருடைய சகோதரர்  யாருக்கும் தெரியாமல், டெல்லி கணேஷ் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவர்களிடம், `தனது கணவர் இருசக்கர வாகனதில்  இருந்து கீழே விழுந்துவிட்டதாக’சுகன்யா நாடகமாடியுள்ளார். மருத்துவர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். ஆனாலும், கடந்த மாதம் 22-ம் தேதி டெல்லி கணேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து, தெள்ளார் காவல் நிலைய காவல்துறையினர்  விபத்து கோணத்திலேயே வழக்கு பதிந்து சரிவர புலன் விசாரணை மேற்கொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இதனால், சுகன்யா இயல்பாக இருந்திருக்கிறார். கணவரை இழந்துவிட்டோம் என்ற வலியே, வேதனையோ அவரிடம் காணப்படவில்லை. 


Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

 

போலீசார் விசாரணையில் சிக்கிய மனைவி கைது 

ஏற்கெனவே, மனைவியின் நடத்தை சரியில்லை என்று டெல்லி கணேஷ் சண்டைப் போட்டு வந்ததற்கும், திடீரென டெல்லி கணேஷ் இறந்ததற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதாகவும் வீட்டின் அக்கம்பக்கத்தினரும், கிராமத்தினரும் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லி கணேஷின் தாய் தமிழ்ச்செல்வி, `தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி மருமகள் சுகன்யா, அவரது தம்பி நவீன்குமாரை விசாரியுங்கள்’ என தெள்ளார் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்திருக்கிறார். அதன்பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையை சரியாகப் படித்து பார்த்து, மனைவி சுகன்யாவையும், அவரது தம்பி நவீன்குமாரையும் பிடித்து காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது, கட்டையால் தாக்கி கணவரை கொலைச் செய்ததை சுகன்யா ஒப்புக்கொண்டார். தானும் உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி நவீன்குமாரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்றைய தினம் இருவரையும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். மேலும்  இருவரையும் வேலூர் சிறையில்  அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget