மேலும் அறிய

Crime: மதுபோதையில் காவலரை நையப் புடைத்த ராணுவ வீரர்கள் சிறையில் அடைப்பு

ஆரணி அருகே காவலரை மது போதையில் தாக்கிய 3 ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த , கண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாராயம் அதிக அளவில் காய்ச்சி விற்பனை செய்வதாக கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து கண்ணமங்கலம் காவல்நிலைய துணை ஆய்வாளர் கார்த்தி தலைமையிலான காவல்துறையினர், சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்ணமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் படவேடு சாலையிலுள்ள குப்பம் கிராமத்தில் நான்குபேர் குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்வதாக அப்பகுதியில் உள்ளவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் முதல்நிலைக் காவலர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று நான்குபேரையும் கண்டித்து வீட்டுக்குச்செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். 

 


Crime: மதுபோதையில் காவலரை நையப் புடைத்த ராணுவ வீரர்கள் சிறையில் அடைப்பு

அப்போது தலைக்கு மீறிய போதையில் நான்கு நபர்களும் இருந்ததால், அறிவுரை வழங்கிய காவலரிடம் ‘நாங்கள் யார் தெரியுமா, ராணுவ வீரர்கள். எங்களையே அதட்டுகிறாயா?’ என்று மிரட்டியுள்ளனர். அதற்கு காவலர் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, குடித்து விட்டு பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவது தவறானது எனக் கூறியுள்ளார். அதற்கு ராணுவ வீரர்கள் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக காவலர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். காவலர் தாக்கப்பட்ட தகவலறிந்தவுடன் துணை ஆய்வாளர் கார்த்தி தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்துசென்று போதையில் இருந்த ராணுவ வீரர்கள் நான்குபேரையும் காவல்நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். 


Crime: மதுபோதையில் காவலரை நையப் புடைத்த ராணுவ வீரர்கள் சிறையில் அடைப்பு

 

அவர்கள் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பழனி, அய்யப்பன், முருகன் மற்றும் இவர்களின் உறவினர் சரவணன் எனத் தெரியவந்தது. சரவணனை தவிர மற்ற மூவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதும், குலதெய்வ கோயில் திருவிழாவையொட்டி விடுமுறை எடுத்துகொண்டு ஊருக்கு வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.  இருந்தபோதும், காவலரை தாக்கிய புகாரில் நான்குபேர் மீதும் கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் மற்றும் அவருடைய உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நான்கு பேரையும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மூன்று ராணுவ வீரர்கள் சிறையிலடைக்கப்பட்ட இந்தச் சம்பவம், ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதை நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்கள் போதையில் ரகளை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget