![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime:"என்னை கிண்டல் செய்வியா" - 8 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சிறுவன்! மகாராஷ்டிராவில் ஷாக்!
மகாராஷ்டிராவில் கிண்டல் செய்த சிறுமியின் கழுத்தை நெரித்து சிறுவன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: Crime 8 years old girl For Teasing 16 years old boy killing girls and father arrested by police Crime:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/07/254069462b2c6c93f3ec863b04fdd0cf1701952632011572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: மகாராஷ்டிராவில் கிண்டல் செய்த சிறுமியின் கழுத்தை நெரித்து சிறுவன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுமி:
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் கடந்த 1ஆம் தேதி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு சிறுமி வராததால் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையில், பெல்ஹார் கிராமத்தில் அழுகிய நிலையில் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சடலத்தை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 1ஆம் தேதி காணாமல் போன 8 வயது சிறுமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கழுத்தை நெரித்து கொன்ற சிறுவன்
பின்னர், தீவிர விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், சில நாட்களுக்கு பிறகு 8 வயது சிறுமி, 16 வயது சிறுவனை கிண்டல் செய்துள்ளார். இதனால், கோபம் அடைந்த அந்த 16 வயது சிறுவன், சிறுமியை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது, தான் சிறுமி வீட்டை விட்டு டிசம்பர் 1ஆம் தேதி வெளியே வந்துள்ளார். அந்த நேரத்தில் சிறுமியை தன் வீட்டிற்கு இழுத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் 16 வயது சிறுவன். பின்னர், இறந்த சிறுமியின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல், இரண்டு நாட்கள் வீட்டிலையே மறைத்து வைத்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து தந்தையிடம் சிறுவன் கூறியுள்ளார். இதனையடுத்து, இருவரும் சேர்ந்து, பெல்ஹார் கிராமத்தில் ஆளில்லாத ஒரு அறைக்கு மாற்றியுள்ளனர். ஒரு பிளாஸ்டிக் பையில் சிறுமியின் உடலை அடைத்து வைத்துள்ளனர். பின்னர், தனது சொந்த ஊரான ஜல்னா மாவட்டத்திற்கு 16 வயது சிறுவனை, அவரது தந்தை அனுப்பி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 16 வயது சிறுவன் சால்லை பகுதியைச் சேர்ந்தவர். சிறுமியை கொலை செய்த 16 சிறுவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிண்டல் செய்த 8 வயது சிறுமியை, 16 வயது சிறுவன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)