மேலும் அறிய

கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 57). இவரது மகன் பிரபு (25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். மேலும் இளம்பெண்ணின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில், பிரபு அங்கு சென்று அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.

இதை அறிந்த இளம்பெண், பிரபுவிடம் சென்று தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறினார். அதற்கு பிரபு, தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும், வேலை கிடைத்தவுடன் உடனே திருமணம் செய்து கொள்வதாகவும், தற்போது கருவை கலைத்துவிடுமாறும் கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்துள்ளார்.  இதை நம்பிய இளம்பெண், மாத்திரையை அவரிடம் வாங்கி சாப்பிட்டு, கருக்கலைப்பு செய்தார். இதையடுத்து பிரபுவுக்கு நீதிமன்றத்தில் நிரந்த ஊழியர் வேலை கிடைத்தது. இதுபற்றி அறிந்த இளம்பெண், தனது குடும்பத்தினருடன் பிரபு வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.


கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

அதற்கு பிரபு மற்றும் அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, அந்த இளம்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். திருமணத்திற்கு மறுத்ததால் மனவேதனையடைந்த அந்த இளம்பெண், 19.6.2017 அன்று விஷம் குடித்து தற்கொலை முயன்றார்.  இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்த பிரபு மற்றும் அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை சந்தித்து, விரைவில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் ஏதும் கொடுக்க வேண்டாம் எனவும் கூறினர். இதை உண்மை என்று நம்பிய இளம்பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை.


கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

பின்னர் 10.11.2017 அன்று இளம்பெண், தனது தாய் மற்றும் சகோதரியுடன் பிரபு வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து அங்கிருந்த பிரபுவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் மீண்டும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பிரபு, தனது தந்தை அன்பழகன், தாய் ராஜேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து, இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து மிரட்டல் விடுத்தார்.

மேலும் அவரது தாய் மற்றும் சகோதரியை ஆபாசமாக திட்டினர். 10 ஆண்டு சிறை இது குறித்து அந்த இளம்பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Hyundai Creta EV: மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Embed widget