மேலும் அறிய

கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 57). இவரது மகன் பிரபு (25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். மேலும் இளம்பெண்ணின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில், பிரபு அங்கு சென்று அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.

இதை அறிந்த இளம்பெண், பிரபுவிடம் சென்று தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறினார். அதற்கு பிரபு, தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும், வேலை கிடைத்தவுடன் உடனே திருமணம் செய்து கொள்வதாகவும், தற்போது கருவை கலைத்துவிடுமாறும் கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்துள்ளார்.  இதை நம்பிய இளம்பெண், மாத்திரையை அவரிடம் வாங்கி சாப்பிட்டு, கருக்கலைப்பு செய்தார். இதையடுத்து பிரபுவுக்கு நீதிமன்றத்தில் நிரந்த ஊழியர் வேலை கிடைத்தது. இதுபற்றி அறிந்த இளம்பெண், தனது குடும்பத்தினருடன் பிரபு வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.


கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

அதற்கு பிரபு மற்றும் அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, அந்த இளம்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். திருமணத்திற்கு மறுத்ததால் மனவேதனையடைந்த அந்த இளம்பெண், 19.6.2017 அன்று விஷம் குடித்து தற்கொலை முயன்றார்.  இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்த பிரபு மற்றும் அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை சந்தித்து, விரைவில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் ஏதும் கொடுக்க வேண்டாம் எனவும் கூறினர். இதை உண்மை என்று நம்பிய இளம்பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை.


கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

பின்னர் 10.11.2017 அன்று இளம்பெண், தனது தாய் மற்றும் சகோதரியுடன் பிரபு வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து அங்கிருந்த பிரபுவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் மீண்டும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பிரபு, தனது தந்தை அன்பழகன், தாய் ராஜேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து, இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து மிரட்டல் விடுத்தார்.

மேலும் அவரது தாய் மற்றும் சகோதரியை ஆபாசமாக திட்டினர். 10 ஆண்டு சிறை இது குறித்து அந்த இளம்பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
Embed widget