மேலும் அறிய

Samosa: சமோசாவின் உள்ளே ஆணுறை! சாப்பிட்ட ஊழியர்கள் பேரதிர்ச்சி - கொடூரத்தின் பின்னணி என்ன?

மகாராஷ்ட்ராவில் தொழிற்சாலை ஊழியர்கள் சாப்பிட்ட சமோசாவில் ஆணுறை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்து விற்பனை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம்:

இந்த நிலையில், அதேபோன்று மோசமான சம்பவம் ஒன்று புனேவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வாகன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு எஸ்.ஆர்.ஏ. என்ற தனியார் நிறுவனத்தினர் சிற்றுண்டி விநியோகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் வழங்கி வந்த சிற்றுண்டியில் பேண்டேஜ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்கண்ட தொழிற்சாலை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை வாகன தொழிற்சாலை ரத்து செய்தது. இதையடுத்து, கேடலிஸட் செர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் தொழிற்சாலைக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தை மனோகர் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கினர்.

சமோசாவில் ஆணுறை:

இவர்கள் முறையாக அந்த நிறுவனத்திற்கு சமோசா உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வழக்கம்போல தொழிற்சாலை ஊழியர்களுக்கு சிற்றுண்டியாக சமோசா வழங்கப்பட்டது. ஆனால், சமோசாவை சாப்பிட்ட ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சமோசாவில் ஆணுறை, குட்கா மற்றும் கற்கள் இருந்துள்ளது. இதனால், தொழிற்சாலை ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சிக்ளி காவல் நிலையத்தில் தொழிற்சாலை சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. வாகன தொழிற்சாலைக்கு முதலில் சிற்றுண்டி விநியோகித்த எஸ்.ஆர்.ஏ. என்டர்பிரைசஸ் நிறுவனத்தினர் தங்களது ஒப்பந்தம் ரத்தானதால் தொழிற்சாலை நிர்வாகம் மீது கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், புதியதாக ஒப்பந்தம் பெற்ற மனோகர் என்டர்பிரைசஸ் நிறுவனம் மீதும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

காரணம் என்ன?

இதனால், இரு நிறுவனத்தையும் பழிவாங்க எஸ்.ஆர்.ஏ. நிறுவனத்தின் உரிமையாளர்கள் 3 பேரும் சதித்தீட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஃபிரோஸ் ஷைக் மற்றும் விக்கி ஷைக் இருவரையும், புதியதாக ஒப்பந்தம் பெற்ற மனோகர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியில் சேர வைத்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட சமோசாவின் உள்ளே ஆணுறை, கற்கள், குட்காவை வைத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்த பிறகு, இந்த சதித்திட்டத்திற்கு மூளையாக இருந்த ரஹீம் ஷைக், அசார் ஷைக் மற்றும் மலார் ஷைக் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். புதியதாக ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திற்கு அவப்பெயர் உண்டாக்கி அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைக்கவே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறினர். ஒரு நிறுவனத்தை பழிவாங்குவதற்காக சமோசாவில் ஆணுறை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget