மேலும் அறிய

மொபைல் ஆப் மூலம் தற்பாலின சேர்க்கை விருப்பம்கொண்ட இளைஞர்களுக்கு குறி.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்..

மொபைல் செயலி மூலம் அறிமுகமாகி தற்பாலின சேர்க்கையாளர்களை வரவழைத்து நண்பர்களுடன் இணைந்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். வயது 34 இவர், காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்டவர் எனவும், Bluetoo app என்ற மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையாளர்களிடம் வீடியோ மற்றும் சாட்டிங்கில் உரையாடி வந்ததாகவும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் சிவானந்தா காலனி காந்தி நகரைச் சேர்ந்த பிரசாத் (வயது 19) என்பவர், கங்காதரனை செல்போனில் தொடர்பு கொண்டு தற்பாலின சேர்க்கைக்காக வடகோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார்.

இதன்படி அங்கு சென்ற கங்காதரன் பிரசாத் உடன் கங்காதரன் நிர்வாணமாக ஒரின சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அப்பகுதிக்கு வந்த நிஷாந்த், மாணிக்கம் ஆகியோர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பிரசாத், நிஷாந்த், மாணிக்கம் ஆகிய மூவரும் இணைந்து கங்காதரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கங்காதரன் பணம் இல்லை எனக் கூறியதால், அவரிடம் இருந்த அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மூவரும் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கங்காதரன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், மொபைல் செயலி மூலம் அறிமுகமாகி தற்பாலின சேர்க்கையாளர்களை வரவழைத்து நண்பர்களுடன் இணைந்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாத்தினை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதேபோல மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்ட மேலும் ஒரு இளைஞரை மிரட்டி இக்கும்பல் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. காந்திபுரம் பகுதியை சேர்ந்த அபிராம் என்ற 31 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தற்பாலின சேர்க்கையில் ஆர்வம் இருந்ததாகவும், Bluetoo app என்ற மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையாளர்களிடம் வீடியோ மற்றும் சாட்டிங்கில் உரையாடி வந்ததாகவும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் அறிமுகமான பிரசாத் அபிராமினை தொடர்பு கொண்டு சாய்பாபா காலணி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற அவரை 3 இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு தற்பாலின சேர்க்கையில் ஈடுபட்ட பின்னர், அபிராமை மரக்கட்டை மற்றும் இரும்பால் தாக்கி ஆப்பிள் ஐபோன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அபிராம் அளித்த புகாரின் பேரில், சாய்பாபா காலனி காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ரத்தினபுரி பகுதியை நிஷாந்த் என்ற 22 வயது கல்லூரி மாணவரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மாணிக்கம் என்பவரை தேடி வருகின்றனர். மொபைல் செயலி மூலம் தற்பாலின இளைஞர்களை குறி வைத்து கல்லூரி மாணவர்கள் பணம் பறித்ததாக அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget