மேலும் அறிய

கஞ்சா போதையில் இளைஞர்கள் களேபரம்... கொத்தாக தூக்கி ‛கொத்து புரோட்டா’ போட்ட கோவை மக்கள்... என்ன அடி...!

இரவு முழுவதும் மது அருந்தியும், கஞ்சா பயன்படுத்திக் கொண்டும் போதையில் கத்தியபடியும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி&டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர், தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ஓர் வீட்டில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தங்கியுள்ளார். சிவாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரது நண்பர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரிஹரன், முத்துவேல், சங்கர், ராஜா, முருகன் ஆகியோர் இவரது வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் மது அருந்தியும், கஞ்சா பயன்படுத்திக் கொண்டும் போதையில் கத்தியபடியும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார். 


கஞ்சா போதையில் இளைஞர்கள் களேபரம்... கொத்தாக தூக்கி ‛கொத்து புரோட்டா’ போட்ட கோவை மக்கள்... என்ன அடி...!

நேற்று காலை சிவா திருநெல்வேலிக்கு சென்ற நிலையில் போதை மயக்கத்திலிருந்த அவரது நண்பர்கள் 5 பேரும் மீண்டும் மதியம் 2 மணியளவில் அரிவாள், கத்தி கம்புகளுடன் இவர்களை கண்டித்த வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரத்தையும், அவரது மனைவி பூர்ணிமா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து தடுக்க வந்த பக்கத்து வீட்டுகாரரான ஷ்யாம் என்பவரை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். இதில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கு ஏறிய நிலையில் வீதியில் அரிவாளுடன் சுற்றிய 5 பேரும் அங்கிருந்த பொதுமக்களையும் மிரட்டி, எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்த அபி, சசி, பிருந்தா, தர்ணிகா உள்ளிட்டவர்களையும் தாக்கியதில் அவர்களுக்கும் படுகாயங்கள் ஏற்பட்டன. மேலும் அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமியைத் தாக்கியதுடன், அவரை அரிவாளால் வெட்ட துரத்தியுள்ளனர். அவர் வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டதால் ஜன்னல் கண்ணாடிகள், கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். 


கஞ்சா போதையில் இளைஞர்கள் களேபரம்... கொத்தாக தூக்கி ‛கொத்து புரோட்டா’ போட்ட கோவை மக்கள்... என்ன அடி...!

இது குறித்து தகவலறிந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் போதையில் ரகளை செய்தவர்களை இவர்களை பிடிக்க முற்பட்டனர். இவர்கள் 5 பேரும் போலீசாரை கண்டதும் அருகில் இருந்த ராவத்தகொல்லனூர் பள்ளம், கே.எஸ்.பி பள்ளம் வழியாக தப்பித்து ஓடியுள்ளனர். பொதுமக்கள் தொடர்ந்து துரத்தியதால் தென்றல் நகரில் உள்ள தென்னந்தோப்பு புதர்களுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நான்குபுறமும் சுற்றி வளைத்து தேடினர். அருகில் சென்றவர்களை 5 பேரும் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முற்பட்டனர். இறுதியில் இவர்களை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிட்டதட்ட 3 மணிநேரம் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருக்கும் பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களும், படுகாயமுற்ற பொது மக்களும், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்... கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்... கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget